states

மீட்புப்பணிக்கான வெளிநாடு வாழ் ‘இந்திய சமூக நல நிதி’ என்ன ஆனது?

புதுதில்லி,மார்ச் 3- பல்வேறு நாடுகளில் இந்திய மாணவர்களும் மக்களும் உள்ளனர். அவர்களுக்கு மருத்துவ செலவு, உயிரிழப்பு மற்றும் இயற்கை சீற்றம் போன்ற அவசர காலங்களில் ஏற்படும் பல்வேறு விதமான பாதிப்புகளில் இருந்து  மீட்க அவசர பணிக்காக தேவைப்படும் நிதிக்கென ‘இந்திய சமூக நல நிதி’ ஒன்று 2009 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான மன்மோகன் சிங் அரசு கொண்டு வந்தது.   இந்த நிதி மூலம் போர்ச்சூழல் உள்ளிட்ட அவசர காலங்களில் இந்தி யர்களை மீட்க தேவையான உணவு, தங்குமிடம், போக்குவரத்து மற்றும் விமான பயண செலவுக்கான தேவைக் காக இந்த நிதி ஏற்படுத்தப்பட்டது.  

வெளிநாடுகளில் உள்ள இந்திய வெளியுறவுத் துறை அதிகாரியும் இந்த நிதியில் இருந்து ஆதாரப்பூர்வமான விவரங்களை அளித்து நிதியை பெற்றுக்கொள்ள வகை செய்யப் பட்டிருந்தது. பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு 2017 ஆம் ஆண்டு இந்த  நிதி சட்டத்தில் மேற்கொண்ட திருத்தங்களின் அடிப்படையில் மேற்கண்ட காரணங்களுக்காக மட்டு மல்லாமல், இந்திய கலாச்சாரத்தை பறைசாற்றும் யோகா தினம், தேசிய தினம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சி களுக்கும் பயன்படுத்த திருத்தம் செய்தது. இதன்மூலம், ஆர்.எஸ்.எஸ். மற்றும் மதவாத அமைப்புகளின் கலை  பிரிவினர் கலாச்சார நிகழ்ச்சி என்ற பெயரில் இந்த நிதியில் இருந்து ஏராளமான தொகையை வீணடித்து வருகின்றனர். உக்ரைனில் போர் துவங்கும் முன் மாணவர்களுக்கு ஓரிரு சிறப்பு விமானங்களை ஏற்பாடு செய்த அரசு, அவர்களுக்கு கட்டண சலுகை ஏதும் அளிக்காமல் உயர்த்தப்பட்ட கட்ட ணத்தில் அழைத்து வந்தது. இதுதவிர, போர்ச்சூழலில் தூதர கத்தின் உதவியைத் தேடிவந்த மாண வர்களுக்கு தேவையான உணவு மற்றும் தங்குமிடம் ஏற்பாடு செய்யப் பட்டதா என்பதும் தற்போது அண்டை  நாடுகளில் தங்கியிருக்கும் மாணவர் களுக்கும் இந்த உதவிகள் கிடைக் கிறதா என்பதும் கேள்விக்குரியாகவே உள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குருதீப் சிங் சப்பால் தனது டிவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.