states

img

மேற்குவங்கம்: 500 நாட்களைக் கடந்த நீதிக்கான போராட்டம்

கொல்கத்தா, ஜூலை 29 - மேற்குவங்கத்தில் ஆசிரியர் பணி நியமனங்களில் கோடிக்கணக்கான ரூபாய் லஞ்சம் பெற்றுக் கொண்டு தகுதியற்றவர்களை நியமித்த விவ காரத்தில் நீதி கேட்டு நடக்கும் போராட்டம் 500 நாட்களைக் கடந்துள்ளது.  தகுதி பெற்றும் வேலை கிடைக்கா மல் போனவர்கள் தலைநகர் கொல் கத்தாவில் உள்ள காந்தி சிலைக் கருகில் தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார்கள்.போராட்டத்திற்குத் தங்கள் முழு ஆதரவும் உண்டு என்று  இடது முன்னணி தலைவர்கள் நேரில்  சென்று தெரிவித்துள்ளனர். போராட்டத்தின் 500ஆவது நாளன்று கொல்கத்தாவின் மூன்று திசைகளில் இருந்து பெருந்திரள் பேரணிகள் இடது முன்னணி சார்பில்  தொடங்கின.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கு வங்க மாநிலக்குழு செயலாளர் முகமது சலீம் உள்ளிட்ட பல்வேறு இடது முன்னணித் தலைவர்கள்

தலைமையில் நடந்த இந்தப்பேரணிகள் போராட்டம் நடைபெறும் இடத்திற்கருகில் ஒன்றி ணைந்தன. போராடிக்கொண்டி ருக்கும் இளைஞர்களுடன் இடது முன்னணியின் தலைவர் பிமன் பாசு ஏற்கெனவே அமர்ந்திருந்தார்.  அப்போது உரையாற்றிய தலை வர்கள், அனைத்து ஊழல்களுக்கும் முதல்வர் மம்தா பானர்ஜிதான் கார ணம். அவர் உடனடியாகப் பதவி விலக வேண்டும்.  ஊழலில் ஈடுபட்ட அனைத்து திரிணாமுல் கட்சித் தலைவர்களும் சிறையில் அடைக்கப் பட வேண்டும் என்று கோரினர். போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு வேலைகள் தரும் வகையில் தீவிர மான நடவடிக்கை வேண்டும் என்ற தங்கள் கருத்தை முன்வைத்தனர்.  பேரணிகளில் துவங்கி, போராட்டம் நடைபெறும்இடம்வரை யில், “திருடர்கள், திருடர்கள்” என்று ஊழல்வாதிகளை வெளியேறச் சொல்லி முழக்கங்கள் எழுப்பப் பட்டன. கூட்டத்தில் பேசிய பிமன்பாசு, “ஊழல் நடந்த சமயத்தில் கல்வித் துறை அமைச்சராக இருந்தவர் தற்போது தொழிற்துறை அமைச்ச ராக இருக்கிறார்.

கல்வித்துறையில் எந்த வேலையும் பார்க்காமல் இருந்த அவர், தற்போது தொழிற்துறையிலும் எந்த வேலையும் பார்க்கவில்லை. பல பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்கள் இல்லை. தகுதியற்றவர்கள் இவ்வ ளவு பேரை நியமித்த பிறகும், ஆசி ரியர்கள் பணியிடங்கள் காலியாகவே உள்ளன. ஆசிரியர்கள் இல்லாததால் பல பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டு விட்டன. இவையனைத்திற்கும் முதல்வரே பொறுப்பானவராவார். ஊழல்வாதிகளுக்கு தண்டனை தர வேண்டும்” என்றார். போராட்டத்திற்கு துணையாக உறுதியோடு நிற்போம் என்ற  வாக்குறுதியைத் தந்து உரையாற்றிய முகமது சலீம், “நகர்மன்ற உறுப் பினர்கள், மேயர், எம்.எல்.ஏ, அமைச்சர், மம்தா பானர்ஜி மற்றும்  அவரோடு அவரது குடும்ப உறுப்பினர் கள் என்று அனைத்து திருடர்களை யும் பிடித்து சிறையில் அடைக்க வேண்டும். நாம் நாரதா-சாரதா ஊழல் களைப் பார்த்தோம். திருடர்கள் மீது  முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க மாட்டார். மோடி மற்றும் அமித் ஷா வுடன் ஒரு கூட்டத்திற்கு அவர் ஏற்பாடு செய்தார். இதை அவர் மீண்டும் செய்வார்.  மக்கள் இயக்கம் மூலமாகவோ அல்லது நீதிமன்றங்கள்  மூலமாகவோ அழுத்தம் தந்து  அனைத்துத் திருடர் களையும் சிறைகளில் அடைப்போம்.  அமைச்சரோ அல்லது அரசு அதிகாரியோ, அவர்  ஊழல்வாதி என்றால் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட வேண்டும்” என்றார். திரிணாமுல் தலைவர்களில் ஒருவரான பார்த்தா சட்டர்ஜிக்கு நெருக்கமானவரான அர்பிதா முகர்ஜி யின் வீடுகளில் இருந்து இதுவரையில் 51 கோடி ரூபாய் வரையில் கைப்பற்றப்பட்டுள்ளது. மற்றொரு வீட்டையும் அமலாக்கத்துறை கைவசப்படுத்தியிருக்கிறது. அதிலும்  விரைவில் சோதனை போடப் போகிறார்கள். மாநிலத்தில் உள்ள அனைத்துப் பகுதி மக்களும் ஊழலுக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு தர வேண்டும் என்று இடது முன்னணி கோரியுள்ளது.