states

ஒன்றிய பட்ஜெட் 2024 : முக்கிய அம்சங்கள்

2024-25 நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டிற்கு, ஒன்றிய அமைச்சரவை கூடி ஒப்புதல் அளித்தது. அதைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பின்னர் நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார்.

2024-25 இடைக்கால பட்ஜெட் அம்சங்கள்

நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் வருமாறு: விவசாயிகள், ஏழைகள் என மக்கள் நலத் திட்டங்கள் மூலம் 10 ஆண்டுகளில் ரூ. 34 லட்சம் கோடி மானியம் சென்றடைந்துள்ளது. 2047-ல் வளர்ச்சி பெற்ற புதிய இந்தியா  உருவாகும். பாஜக அரசின் இலக்காக சமூக நீதி உள்ளது. 4 முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்துவதே அரசின் நோக்கம். வறுமை ஒழிப்பு, மகளிருக்கு அதிகாரம், இளைஞர்களுக்கு வாய்ப்பு, அனை வருக்கும் உணவு வழங்குவதே நோக்கம். 25 கோடி பேர் மீட்பு 25 கோடி மக்களை வறுமையில் இருந்து பாஜக அரசு மீட்டுள்ளது. நேரடி யாக வங்கிகள் மூலம் பயனாளிகளுக்கு நிதி வழங்கியதால் அரசுக்கு ரூ. 2.7 லட்சம் கோடி மிச்சம் ஏற்பட்டுள்ளது. 11.8 கோடி விவசாயிகளுக்கு நேரடியாக உதவித்தொகை வழங்கப்படுகிறது. 78 லட்சம் சாலையோர வியாபாரிகளுக்கு கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. முத்ரா திட்டத்தின் கீழ் 43 கோடி முறை வங்கிக்கடன்கள் வழங்கப்பட்டுள் ளன. பெண்களுக்கு முத்ரா திட்டத்தின் கீழ் 30 கோடி முறை கடன்கள் வழங் கப்பட்டுள்ளன. தொழில்முனைவோராகும் பெண்களின் எண்ணிக்கை கடந்த 10  ஆண்டுகளில் 28 சதவிகிதம் உயர்ந்துள்ளது.

1.4 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு திறன் பயிற்சி

திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 3,000 தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. திறன் மேம்பாட்டு பயிற்சி மூலம் 54 லட்சம் இளைஞர்களின் திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது. சிறந்த நிர்வாகம் மற்றும் திட்டங்கள் மூலம், இந்திய இளைஞர்களிடம் பணித்திறனுக்கான நம்பிக்கை அதிகரித்துள்ளது. 1.4 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கான திறன் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. நாட்டில் விலைவாசி கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. பெண்களுக் கான இடஒதுக்கீடு மற்றும் முத்தலாக் தடைச்சட்டங்களால் மகளிர் பயனடைந்துள் ளனர். அனைவரையும் அரவணைக்கும் அர சாக ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது. பெண்கள் உயர்கல்வி பயில்வது 10  ஆண்டு களில் 28 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

10 ஆண்டில் 7 ஐஐடி, 15 எய்ம்ஸ், 390 பல்கலைக்கழகங்கள்

கல்வித்துறையில் சீர்திருத்தங்களை புதிய தேசிய கல்வி கொள்கை மூலம்  செயல்படுத்தி வருகிறோம். 10 ஆண்டுகளில் 7 ஐஐடி.கள், 15 எய்ம்ஸ், 390 பல்கலைக்கழ கங்கள் நாடு முழுவதும் ஏற்படுத்தப் பட்டுள்ளன.  நாடு முழுவதும் மருத்துவக்கல்லூரிகள் அமைப்பது தொடர்பாக தனிக் குழு அமைக்கப்படும். ஏற்கனவே உள்ள மருத்துவமனைகளில் புதிதாக மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும். மகப்பேறு திட்டங்கள், குழந்தை நலத் திட்டங்கள் ஒரே தலைப்பின் கீழ் கொண்டு  வந்து செயல்படுத்தப்படும். தடுப்பூசி போடும் திட்டங்கள் இந்தியா முழுமைக் கும் செயல்படுத்தப்படும். ஆயுஷ்மான் காப்பீடு திட்டம் அங்கன்வாடி ஊழியர்கள்,  தூய்மை பணியாளர்களுக்கு விரிவுபடுத்தப் படும்.

சோலார் மின்சக்தி உற்பத்தி செய்யும்  வீடுகளுக்கு 30 யூனிட் இலவச மின்சாரம்

மாநிலங்களுடன் ஆலோசித்து அடுத்த தலைமுறை பொருளாதார சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்படும். ஒரு கோடி வீடுகளில் சூரிய ஒளி மின்சாரம் திட்டம் அமல்படுத்தப்படும். சோலார் மின் வசதி ஏற்படுத்தி உற்பத்தி செய்யும் வீடுகளுக்கு முதல் 300 யூனிட்டுகள் இலவச மாக வழங்கப்படும். பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 3 கோடி குடும்பங்களுக்கு வீடு கட்டித்தரப் பட்டுள்ளன.அடுத்த 5 ஆண்டுகளில் கிராமப் புறங்களில் 2 கோடி வீடுகள் கட்டப்படும்.  வேளாண்துறையில் அரசு மற்றும் தனியார் துறைகள் கூடுதல் முதலீடு செய்வது  ஊக்குவிக்கப்படும். வேளாண் விளை பொருள், அறுவடைக்கு பிந்தையை நடவடிக் கைகளுக்கு கூடுதல் முதலீடுகள் மேற்கொ ள்ளப்படும். பிரதமரின் விவசாய திட்டத்தின் கீழ் 38 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.

விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க புதிய திட்டங்கள்

விவசாயிகளின் வருமானத்தை அதி கரிப்பதற்கான திட்டங்கள் செயல்படுத்தப் படும். யூரியாவைத் தொடர்ந்து டிஏபி உரங்களிலும் நானோ தொழில்நுட்பம் கொண்டுவரப்படும். 4 கோடி விவசாயி களுக்கு பயிர்க்காப்பீடு வழங்கப்பட்டுள் ளது. அறுவடைக்கு பின் விளைபொருட் களை பாதுகாக்க, மதிப்புக்கூட்டு பொருட் களை உருவாக்க சந்தைப்படுத்த திட்டம் வகுக்கப்படும். மின்சார வாகனங்கள் உற்பத்தி, பயன் பாட்டை ஊக்குவிக்க ஒன்றிய அரசு தீவிரம்  காட்டி வருகிறது. நாடு முழுவதும் மின்சார  வாகனங்களுக்கான பேட்டரி சார்ஜிங் மையங்கள் அதிகரிக்கப்படும். பால் உற்பத்தியை அதிகரிக்க புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.

14 வயதுக்கு உட்பட மகளிர்க்கு கர்ப்பப்பை புற்றுநோய் தடுப்பூசி

9-14 வயதுக்குட்பட்ட பெண் குழந்தை களுக்கு கர்ப்பப்பை புற்றுநோயை தடுப்பதற்கான தடுப்பூசி போடப்படும்.ஊட்டச்சத்து குறைபாடுகளை சரி செய்ய புதிய  செயலி அறிமுகம் செய்யப்பட உள்ளது. 9 கோடி பெண்களை உறுப்பினராக கொண்டுள்ள 83 லட்சம் சுயஉதவிக் குழுக்கள் கிராமங்களில் பெரும் மாற்றத்தை  ஏற்படுத்தியது. மகளிர் சுயஉதவிக்குழுக் கள் மூலம் ஒரு கோடி பெண்கள் லட்சாதிபதி யாகியுள்ளனர். மீன்வளத்துறையில் 55 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். நாட்டில் 5 ஒருங்கிணைந்த மீன்வளப்பூங்காக் கள் அமைக்கப்படும். கால்நடை வளர்ப்பை  ஊக்குவிக்க புதிய திட்டங்கள் கொண்டு வரப்படும். கடல் உணவுப்பொருட்களின் ஏற்றுமதி 10 ஆண்டுகளில் இரட்டிப்பாகி உள்ளது.

1000 விமானங்களை வாங்கும்  இந்திய நிறுவனங்கள்

இந்திய விமான நிறுவனங்கள் புதிதாக 1,000 விமானங்களை வாங்க ஆர்டர்கள் கொடுத்துள்ளன. இந்தியாவில் விமான போக்குவரத்தை மேலும் விரிவுபடுத்தும் வகையில் விமான நிலையங்கள் மேம்படுத்தப்படும். உதான் திட்டத்தின் கீழ் 550 தடங்களில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. உதான் திட்டத்தின் கீழ் புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்.10 ஆண்டுகளில் விமான நிலையங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது.

வந்தே பாரத் ரயில் பெட்டிகளாக மாற்றப்படும் 40 ஆயிரம் பெட்டிகள்

40,000 ரயில் பெட்டிகள் வந்தே பாரத் ரயில் பெட்டிகளாக மாற்றப்படும். நாடுமுழுவதும் வந்தே பாரத் ரயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். பெரு நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டங்களை விரிவுபடுத்த முன்னுரிமை அளிக்கப்படும். சரக்கு ரயில் போக்குவரத்துக்காக பிரத்யேக மாக வழித்தடங்கள் செயல்படுத்தப்படும். தொழில் தொடங்க வட்டியில்லாக் கடன் வழங்குவதற்காக ரூ. 1 லட்சம் கோடியில் புதிய நிதியம் அமைக்கப்படும். மாநிலங்களுக்கு வட்டியில்லாக் கடனாக ரூ. 1.2 லட்சம் கோடி வழங்கப்படும். திருத்தப்பட்ட வரி வருவாய் மதிப்பீடு ரூ. 27.56 லட்சம் கோடியாகும். நிதி பற்றாக் குறை 5.8 சதவிகிதம் ஆகும்.

பாதுகாப்புத்துறை செலவினம்  ரூ. 11.11 லட்சம் கோடி

பாதுகாப்புத்துறையில் முதலீட்டை 11.1 சதவிகிதமாக உயர்த்தி 11 லட்சத்து 11 ஆயிரத்து 111 கோடி ரூபாயாக அதிகரிக்கப்படும். பாதுகாப்புத்துறையில் முதலீடு மொத்த உள்நாட்டு வளர்ச்சியான ஜிடிபி.யில் 3.4 சதவிகிதமாக இருக்கும். கடந்த 10 ஆண்டுகளில் மக்களின் உண் மையான சராசரி வருவாய் அதிகரித்துள் ளது. புதிய வருமான வரி திட்டத்தின் கீழ் ரூ.7.5 லட்சம் வருமானம் வரையில் விலக்கு  அளிக்கப்படுகிறது. வருமான வரி செலுத்தும் அனைவருக்கும் நன்றி. இடைக் கால பட்ஜெட் என்பதால் வருமான வரி  விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை. நேர்முக வரி, மறைமுக வரி என எந்த  வரிவிதிப்பு முறையிலும் மாற்றம் இல்லை. வருமான வரி செலுத்துவோருக்கு ஏற்கெனவே உள்ள நடைமுறையே தொட ரும். வருமான வரி செலுத்துவோரின் எண்ணி க்கை 8 கோடியாக அதிகரிக்கப்பட்டுள் ளது. 10 ஆண்டுகளில் வரி செலுத்துவோர் எண்ணிக்கை 2.4 மடங்கு உயர்ந்துள்ளது.

இறக்குமதி வரியில்  எந்த மாற்றமும் இல்லை

இறக்குமதி வரியிலும் எந்த மாற்றமும் இல்லை. பழைய வருமான வரி வழக்குகள்  ரத்துசெய்யப்படும். இதனால் ஒருகோடி பேர் பலன் பெறுவர். வருமான வரி  ரிட்டர்ன்ஸ் தற்போது 10 நாள்களில் வழங்கப்படுகிறது. 2024 – 25 சந்தைகளில் இருந்து 11.75  கோடியை கடனாக திரட்ட இலக்கு நிர்ண யிக்கப்பட்டுள்ளது. உள்கட்டமைப்புக்கான செலவு ரூ. 11.11 லட்சம் கோடியாக அதிகரிக்கப் பட்டுள்ளது. தொழில்நுட்பத்துறை சார்ந்த இளை ஞர்களுக்கு இது பொற்காலம். தொழில் நுட்பம் சார்ந்த ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கத் திட்டங்களுக்கான ஆய்வுகளை மேற்கொள்ள ஒரு லட்சம் கோடி ரூபாய் நிதி  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 50 ஆண்டு களுக்கு வட்டி இல்லாத கடன் திட்டமாக இது வழங்கப்படும்.