ஷில்லாங், ஜூலை 1- “இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு, பன்முகத்தன்மையே நமது பலம். அவ்வாறி ருக்கையில், பொது சிவில் சட்டம் என்பது இந்தி யச் சிந்தனைக்கு எதிரானது” என்று, தேசிய மக்கள் கட்சியின் தலைவரும், மேகாலயா முதல்வருமான கான்ராட் சங்மா சாடி யுள்ளார். இதுதொடர்பாக சங்மா, வெள்ளிக்கிழமை யன்று செய்தியாளர்களுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், “வடகிழக்கு ஒரு தனித்துவமான கலாச்சாரம் மற்றும் சமூக அமைப்பைக் கொண் டது. நாங்கள் அப்படியே இருக்க விரும்பு கிறோம். உதாரணமாக நாங்கள் தாய்வழிச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அதுவே எங்க ளுக்கான பலமாகவும் கலாச்சாரமாகவும் இருந்து வருகிறது. தற்போது அதனை மாற்ற முடியாது. பன்முகத் தன்மையே நமது கலாச்சா ரம்; அதுவே நமது பலம். தற்போதைய சூழ லில் பொது சிவில் சட்டம் இந்தியச் சிந்தனைக்கு எதிரானது. என்றாலும் என்ன மாதிரியான மசோதா தக்கல் செய்யப்பட இருக்கிறது என்று நமக்குத் தெரியாது. அந்த வரைவின் உண்மை யான விஷயங்களை பார்க்காமல் அது குறித்த விபரங்களைக் கூறுவது கடினம்” என்று கூறியுள்ளார்.
மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில், பாஜக பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு நடை பெற்ற கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். அப்போது, ‘‘இருவிதமான சட்டங்களால் நாட்டு நிர்வாகத்தை நடத்த முடியாது. நாட்டு மக்கள் அனைவரும் சமம் என அரசியல் சாசனம் கூறுவதால், நாட்டில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது அவசியம். ஆனால், பொது சிவில் சட்ட விவகாரத்தில் சிலர் தவறான கருத்துகளை பரப்பி, மக்களி டம் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர்’’ என்று கூறியிருந்தார். பிரதமரின் இந்த கருத்துக்கு காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள், முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம், அகில இந்திய மஜ்லிஸ் கட்சி உள் ளிட்டவை கடும் எதிர்ப்பு தெரிவித்தன. பல்வேறு கலாச்சாரங்களை கொண்ட நாட்டில் பெரும்பான்மை சமூகத்தை மனதில் வைத்து ஒரே நாடு ஒரே கலாச்சாரம் என்ற அடிப்படையில் இந்த சட்டத்தை கொண்டு வர பாஜக முயற்சிப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டினார். சட்டம் கொண்டுவரும் திட்டத்தை ஒன்றிய அரசும், சட்ட ஆணையமும் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தினார். பொது சிவில் சட்டத்தை அமல்படுத்து வதன் மூலம் மக்களைப் பிளவுபடுத்தி வெறுப்பு ணர்வை வளர்க்க பாஜக முயற்சி மேற்கொள்கி றது என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி குற்றம் சாட்டினார். 2024 மக்க ளவைத் தேர்தலை முன்னிறுத்தியே இந்த சட்டத்தைக் கொண்டு வர பாஜக முயல்வதாக அவர் தெரிவித்தார். மேகாலயாவில் பாஜக கூட்டணியில் இருக்கும் தேசிய மக்கள் கட்சியின் தலை வரும், மாநில முதல்வருமான கான்ராட் சங்மா வும் பொது சிவில் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரி வித்துள்ளார்.