“பாஜக நிரந்தரமாக இதே பலத்துடன் இருக் காது. பிரதமர் மோடிக்குப் பிறகு அந்த கட்சி பலத்தை இழந்து விடும். காங்கிரஸ் ஆட்சி இல்லை என்பதற்காக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆதங்கப்படத் தேவை இல்லை. காங்கிரஸ் மட்டுமே கடைசி வரை உயிர்ப்புடன் இருக்கும். பாஜக உள்ளிட்ட கட்சிகள் காணாமல் போய் விடும். அதனால் காங்கிரஸ் கட்சியினர் நம்பிக்கை இழக்கக்கூடாது” என்று அந்தக் கட்சியின் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி குறிப்பிட்டுள்ளார்.