முர்ஷிதாபாத், மால்டா, நாடியா, தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டங்களில் ஆயுதப்படை சட்டம் அமல்படுத்த வேண்டுமாம்!
மேற்குவங்கத்தில் முஸ்லிம் மக்களை ஒடுக்க பாஜக சூழ்ச்சி
பாஜக எம்.பி., வெறிப்பேச்சு
மேற்குவங்க மாநிலம் முர்ஷிதா பாத்தில் ஏப்ரல் 8 அன்று வக்பு சட்டத்திற்கு எதிர்ப்பு தெரி வித்து முஸ்லிம் மக்கள் மற்றும் சமூக, ஜனநாயக அமைப்புகள் அஹிம்சை வழி யில் அமைதியாக போராட்டம் நடத்தி னர். இந்த போராட்டத்தில் புகுந்த இந் துத்துவா குண்டர்கள் தாக்குதல் நடத்தி னர். தொடர்ந்து ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்கள் பதில் தாக்குதல் என்ற பெயரில் வன்முறையை மேலும் தூண்ட முர்ஷிதாபாத் நகரமே வன் முறை பூமியாக மாறியது. இந்த வன் முறையில் முஸ்லிம் மக்களின் வீடுகள், வாகனங்கள் தீ வைக்கப்பட்டு கொளு த்தப்பட்டன. காவல்துறையை நோக்கி கற்கள் வீசப்பட்டது. பின்னர் அதிரடிப் படையினர் வன்முறையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மீண்டும் வெள்ளிக்கிழமை அன்று (ஏப்.11) அன்று முர்ஷிதாபாத்தில் திரி ணாமுல் - பாஜக குண்டர்களின் மோத லால் முஸ்லிம் மக்கள் வாழும் பகுதியில் மீண்டும் வன்முறை வெடித்தது. முர்ஷிதாபாத் மட்டுமின்றி அருகில் உள்ள மாவட்டங்களான மால்டா, தெற்கு 24 பர்கானாஸ், ஹூக்ளி உள் ளிட்ட 3 மாவட்ட முஸ்லிம் மக்களின் போராட்ட களத்திலும் வன்முறை பரவியது. 4 மாவட்டங்களிலும் காவல்துறை வாகனங்கள் உட்பட பல வாகனங் கள் தீக்கிரையாக்கப்பட்டன. பாது காப்புப் படைகள் மீது கற்கள் எறியப் பட்டன. சாலைகளில் தடைகள் ஏற் படுத்தப்பட்டதால் முக்கிய நகரங்கள் துண்டிக்கப்பட்டன. வன்முறையால் பாதிக்கப்பட்ட முர்ஷிதாபாத், மால்டா, தெற்கு 24 பர்கானாஸ், ஹூக்ளி உள் ளிட்ட 4 மாவட்டங்களின் பெரும் பாலான பகுதிகளில் 144 தடை உத்த ரவு அமல்படுத்தப்பட்டன. இந்நிலையில், புருலியா தொகுதி யின் நாடாளுமன்ற உறுப்பினரும், பாஜகவின் மூத்த தலைவருமான ஜோதிர்மய் சிங் மகதோ,” வன்முறை யை ஒடுக்க முர்ஷிதாபாத், மால்டா, நாடியா மற்றும் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டங்களில் ஆயுதப்படைச் சட்டம் அமல்படுத்த வேண்டும்” என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக அவர் எழுதி யுள்ள கடிதத்தில்,”மேற்கு வங்கத்தின் எல்லை மாவட்டங்களான முர்ஷிதா பாத், மால்டா, நாடியா மற்றும் தெற்கு 24 பர்கானாஸ் உள்ளிட்ட மாவட்டங்க ளில் வன்முறை மிக மோசமாக அரங் கேறியுள்ளது. இந்து சமூகத்தினர் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்ட இந்த பகு திகளை ஆயுதப்படை (சிறப்பு அதிகா ரங்கள்) சட்டத்தின் (AFSPA) கீழ் “கல வரப் பகுதிகள்” என அறிவிக்க வேண் டும்” என அதில் கூறப்பட்டுள்ளது. முர்ஷிதாபாத், மால்டா, நாடியா மற்றும் தெற்கு 24 பர்கானாஸ் மாவட் டங்களில் முஸ்லிம் மக்கள் பெரும் பான்மையாக வசிக்கின்றனர். அத னால் தான் இந்த 4 மாவட்டங்களிலும் முஸ்லிம் மக்களை ஒடுக்க மற்றும் அப்புறப்படுத்தும் நோக்கத்தில் ஆயு தப்படை சிறப்பு சட்டம் அமல்படுத்தக் கோரி பாஜக எம்.பி., ஜோதிர்மய் சிங் மோடி அரசிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். ஆயுதப்படை சிறப்பு சட்டம் அமலா கும் பகுதி ஒன்றிய அரசின் கட்டுப் பாட்டில் கொண்டு வரப்படும். அந்த பகு தியில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர காவல்துறைக்கு அனை த்து விதமான சுதந்திரம் அளிக்கப்படும். என்கவுண்டர் கூட அதிகமாக நடை பெறும். இதுதான் ஆயுதப்படை சிறப்பு சட்டம் ஆகும். பாஜக எம்.பி., ஜோதிர் மய் சிங்கின் செயலுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.