கேரள நடிகை பாவனா, கடந்த 2017-ஆம் ஆண்டு, சக நடிக ரான திலீப்பால் கடத் தப்பட்டு பாலியல் வன் கொடுமைக்கு உள்ளாக் கப்பட்டதாக புகார் எழுந்தது. இந்நிலை யில், அந்த சம்பவம் தொடர்பாக 5 ஆண்டு களுக்குப் பிறகு, நடிகை பாவனா முதன் முறையாக இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். “குற்றம் செய் தது நான் இல்லை என்றாலும், என்னை அவமானப்படுத்தவும், அமைதியாக்க வும், தனிமைப்படுத்தவும் பல முயற்சிகள் நடந்தன. இப்போது எனக்காக ஒலிக்கும் பல குரல்களைக் கேட்கும்போது, இந்த யுத்தத்தில் நான் தனியாள் இல்லை என் பதை உணர்கிறேன். உடன் நின்ற அனை வருக்கும் இதயம் கனிந்த நன்றி” என்று தெரிவித்துள்ளார்.