ஓய்வு பெற்றார் உச்சநீதிமன்ற தலைமைநீதிபதி சஞ்சீவ் கன்னா
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யாக இருந்த சஞ்சீவ் கன்னா வின் பதவிக்காலம் செவ்வாய்க் கிழமையுடன் நிறைவடைந்ததையடுத்து, தனது பணியில் இருந்து அவர் ஓய்வு பெற்றார். இதன்மூலம் சஞ்சீவ் கன்னா வின் 20 ஆண்டுகால நீதிபதி பணிக்காலம் முடிவுக்கு வந்தது. சஞ்சீவ் கன்னா முதன்முதலில் 2005 ஆம் ஆண்டு தில்லி உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதி பொறுப்புடன் நீதிபதி வாழ்க்கையை தொடங்கினார். ஒரு வரு டம் கழித்து நிரந்தர நீதிபதியானார். 2019 ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்த்தப்பட்டு, கடந்த நவம்பர் மாதம் நாட்டின் 51ஆவது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியானார். இந்நிலையில், ஓய்வுக்குப் பிறகு எந்தவொரு பதவியையும் ஏற்கப்போவ தில்லை என நீதிபதி சஞ்சீவ் கன்னா தெரிவித்துள்ளார். தனது பிரிவுரை யின்போது அவர் பேசுகையில்,”நான் பேச முடியாமல் தவிக்கிறேன். எனக் குள் நிறைய நினைவுகள் உள்ளன. நீதித் துறை மீது வைத்திருக்கும் பொதுமக்க ளின் நம்பிக்கையைப்பெற கட்டளை யிட முடியாது. அதைப் பெற வேண்டும். நீதித்துறை என்பது பெஞ்ச் மற்றும் பார் கிளப்பைக் குறிக்கும் ஒரு பொது வான சொல். பார் கிளப் என்பது மனசாட்சி யைக் காப்பவர். உச்சநீதிமன்றத்திற்கு நீதிபதிகள் வெவ்வேறு பின்னணியிலி ருந்து வருகிறார்கள். நீதிபதி பி.ஆர்.கவாய் தனக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்தார். அவர், உங்களுக்கு ஒரு சிறந்த தலைமை நீதிபதியாக இருப்பார். அவர் அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரத்தை நிலைநிறுத்துவார். ஓய் வுக்குப் பிறகு நான் எந்தவொரு பதவி யையும் ஏற்கப்போவதில்லை; மாறாக சட்டத் துறையில் எதையாவது செய்ய லாம்” எனக் கூறினார். நீதிபதி பி.ஆர்.கவாய் இன்று பதவியேற்பு நீதிபதி சஞ்சீவ் கன்னா ஓய்வு பெற்ற தைத் தொடர்ந்து, நாட்டின் 52ஆவது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக நீதிபதி பி.ஆர்.கவாய் புதனன்று பதவி யேற்கிறார்.