புதுதில்லி, பிப்.12- சென்னை - பெங்களூரு - மைசூரு நகரங்களை இணைக் கும் வகையில் புல்லட் ரயில் வழித்தடங்களை உருவாக்கு வது குறித்து விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து வருவதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது. தில்லி - வாரணாசி, மும்பை - நாக்பூர், மும்பை - ஐதராபாத் உள்ளிட்ட 8 புதிய புல்லட் ரயில் வழித்தடங் களை உருவாக்கவும் ஆய்வு மேற்கொள்ள தீர்மானிக்கப் பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ் ணவ் மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதி லில் தெரிவித்துள்ளார். மும்பை - அகமதாபாத் வழித்தடத்தில் புல்லட் ரயில் இயக்கப்படும் என ஒன்றிய அரசு ஏற்கெனவே அறிவித் துள்ளது. இந்நிலையில் தில்லி - அகமதாபாத், தில்லி - அமிர்தசரஸ், வாரணாசி - ஹவுரா நகரங்களை இணைக் கும் வகையிலும் புல்லட் ரயில் வழித்தடங்களை உரு வாக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ரயில்வே முடிவு செய்துள்ளது.