states

img

மூன்றாம் பாலினத்தவர்க்கு இடஒதுக்கீடு வழங்குக!

உள்ளாட்சி தேர்தலில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டம் வடலூரை அடுத்த நைனார்குப்பம் கிராமத்தில், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு நிலம் ஒதுக்கி பட்டா வழங்கியதை எதிர்த்து பஞ்சா யத்து தலைவர் மோகன் என்பவர் வழக்கு  தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் மீதான விசாரணை  சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு புதனன்று நடை பெற்றது. அப்போது, மூன்றாம்  பாலினத்த வருக்கு எதிராக தீர்மானம்  நிறைவேற்றி யதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என்று கூறிய நீதிபதி,  தீர்மானம் நிறைவேற்றிய பஞ்சாயத்து தலைவர் மற்றும் உறுப்பினர்களை நீக்கும் நட வடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு  உத்தரவிட்டார்.மேலும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் மூன்றாம் பாலினத்தவர் களுக்கு இடஒதுக்கீடு வழங்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று  தமிழ்நாடு அரசுக்கு நீதிபதி உத்தரவிட் டார். மேலும் இந்த வழக்கை தள்ளுபடி செய்தார்.