18 மாதங்களில் இல்லாத அளவிற்கு இந்தியா வின் உற்பத்தி துறைகளில் உற்பத்தி 2023 டிசம்பரில் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது என்று உற்பத்தி துறை சார்ந்த ஆய்வு விபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த மூன்றரை ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பொருட்கள் உற்பத்திக்கான மூலப்பொருட்களின் விலைகளும் கடுமையாக அதிகரித்துள்ளதாக தொழிற்துறை வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன. ஆனால் வழக்கமான மோடி அரசு புள்ளிவிபரங் களை திரித்து வெளியிடுகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவுக்கு அதிகமாக அதிகரிக்கும் என்று முற்றிலும் பொய்யான விபரங்களை முன் வைத்து வழக்கமான படாடோப பிரச்சாரத்தில் ஈடு பட்டுள்ளது. ஆனால் தொழிற்சாலைகளில் உற்பத்தி வீழ்ச்சி என்பது பொருளாதார மீட்சி வெகுதூரத்தில் உள்ளது என்பதையே காட்டுகிறது. உற்பத்தி வீழ்ந்தாலும் மோடியின் கூட்டுக் களவாணிகளது லாபம் வீழவில்லை.