states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெகபூபா முப்தி

பாகிஸ்தானியர்கள் அனைவரையும் இந்தியாவிலிருந்து நாடு கடத்த வேண்டும் என்ற ஒன்றிய அரசின் முடிவு கவலைகளை எழுப்பியுள்ளது. பாகிஸ்தானியர்கள் 40 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிற்கு வந்து நீண்ட காலமாக நமது சமூகத்தின் ஒரு பகுதியாக இருந்து வருகின்றனர். இந்தியாவில் அமைதியாக வாழ்ந்து வரும் நபர்களை நாடு கடத்துவது மனிதாபிமானமற்ற செயல்.

ஆர்ஜேடி மூத்த தலைவர் சுதாகர் சிங்

பஹல்காம் சம்பவம் தொடர்பாக மோடி அரசு மவுனம் சாதிக்கிறது. பயங்கரவாதிகளுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து நாடு அறிய விரும்புகிறது. ஆனால் பிரதமர் மோடி தொடர்ச்சியாக தேர்தல் பிரச்சாரங்களில் மும்முரமாக உள்ளார். அந்தப் பிரச்சாரங்களிலும் காஷ்மீர் முன்னுரிமையில் இல்லை. மணிப்பூர் வன்முறைகளில் மவுனம் சாதித்ததைப் போலவே காஷ்மீர் பிரச்சனையிலும் மவுனம் காக்கிறார்.

தில்லி ஆம் ஆத்மி தலைவர் சவுரப் பரத்வாஜ்

தில்லி பாஜக அரசு பள்ளி மேலாண்மையுடன் சேர்ந்து கொண்டு, இலவச கல்விக்கு பதிலாக புதிய கட்டண சட்டத்தை கொண்டு வருகிறது. ஆனால் பெற்றோர்களின் கருத்து கேட்கப்பட்டதா? என்பது குறித்து இதுவரை விளக்கம் இல்லை.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பூபேஷ் பாகேல்

பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு நாடு மட்டுமல்ல, உலகமே அதிர்ச்சியடைந்துள்ளது. பெரும்பாலான நாடுகள் இதனைக் கண்டித்தும் உள்ளன. அதனால் நாடாளுமன்ற சிறப்பு அமர்வை மோடி அரசு கூட்ட வேண்டும்.