பாட்னா, ஜூன் 22 - 2024 மக்களவைத் தேர்தலை ஒன்றி ணைந்து சந்திப்பது தொடர்பான, எதிர்க் கட்சித் தலைவர்களின் மாபெரும் ஆலோ சனைக் கூட்டம், பீகார் தலைநகர் பாட்னா வில் வெள்ளிக்கிழமையன்று மாலை நடை பெறுகிறது. இதில், நாட்டின் அனைத்து முக்கிய மான அரசியல் கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்கின்றனர். பெரும்பாலான தலை வர்கள், வியாழக்கிழமையன்றே பாட்னா வை வந்தடைந்துள்ளனர். கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக 38 சதவிகித வாக்குகளைப் பெற்றி ருந்தது. மீதமுள்ள 62 சதவிகித வாக்குக ளை பிரிந்து கிடந்த எதிர்க்கட்சிகள் பங்கிட்டுக் கொண்டன. எனவே, 2024-இல் எதிர்க்கட்சிகள் ஒருங் கிணைந்து தேர்தலைச் சந்திக்கும் நிலையில் பாஜக-வுக்கு நெருக்கடியை கொடுக்க முடியும் என்று ஐக்கிய ஜனதா தளம் தலைவரும், பீகார் முதல்வருமான நிதிஷ்குமார், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் போன்றவர்கள் கூறி யிருந்தனர். மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதி களில் குறைந்தபட்சம் 450 தொகுதிகளி லாவது, பாஜக-வுக்கு எதிராக பொது வேட்பாளரை நிறுத்துவது பற்றியும் இவர்கள் தொடர்ந்து கருத்துக்களை முன் வைத்து வந்தனர்.
அதனடிப்படையில், 2024 மக்கள வைத் தேர்தலில் பாஜக-வை முறிய டிக்கும் வகையில், அனைத்து எதிர்க்கட்சி களும் ஒன்றிணைந்து செயல்படுவதற்கு சாத்தியமான அனைத்து வழிவகைக ளையும் ஆராய்வது பற்றியும், பாஜக-வை முறியடிப்பதற்கான திட்டங்கள் பற்றி கலந்து ஆலோசிக்கவும் ஜூன் 23 அன்று எதிர்க்கட்சிகளின் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. முன்னதாக ஜூன் 12-இல் இக்கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், முக்கியமான தலைவர்கள் சிலர் அன்றைய நாளில் கூட்டத்திற்கு வர முடி யாத நிலையில், தேதி மாற்றம் செய்யப் பட்டது. அதன்படி, பாஜக-வுக்கு எதிரான அனைத்து எதிர்க்கட்சிகளின் கூட்டம், பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் வெள்ளிக்கிழமையன்று பாட்னாவில் கூடுகிறது. இந்த கூட்டத்தில் அகில இந்திய காங்கி ரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் து. ராஜா, தமிழ்நாடு முதல்வரும், திமுக தலை வருமான மு.க. ஸ்டாலின், மேற்குவங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலை வருமான மம்தா பானர்ஜி, ஜார்க்கண்ட் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவருமான ஹேமந்த் சோரன், தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி ஒருங்கி ணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், மகாராஷ்டிரா முன்னாள் முதல்வரும், சிவசேனா (உ.பா.தா.) தலைவருமான உத்தவ் தாக்கரே, ஐக்கிய ஜனதாதளம் தலைவர் ராஜூ ரஞ்சன், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.