states

img

570-ஐ தாண்டியது ஒமைக்ரான் பாதிப்பு

புதுதில்லி, டிச.27- நாடு முழுவதும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்த வண்ணம் உள்ளது. கர்நா டகம், தில்லி உள்ளிட்ட மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளது. பண்டிகைக் காலம் என்ப தால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறு ஒன்றிய, மாநில அரசுகள் கேட்டுக்கொண்டுள்ளன. இருப்பினும் நாளுக்குநாள் தொற்று பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது.  மராட்டியத்தில் புதிதாக 31 பேருக்கு ஒமைக்ரான் உறுதி ஆனது. இதனால் அங்கு ஒமைக்ரான் தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை 141 ஆக அதிகரித்துள்ளது.  கேரளாவில் 19 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அங்கு தொற்று பாதிக்கப் பட்டோர் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது. தெலுங்கானாவில் புதிதாக மூன்று பேருக்கும், ஆந்திரா வில் நான்கு பேருக்கும், ஒடிசாவில் நான்கு பேருக்கும் ஒமைக்ரான் பாதிப்பு ஞாயிறன்று கண்டறியப்பட்டது.

இந்தியாவில் தற்போதய நில வரப்படி ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட வர்கள் எண்ணிக்கை 578 ஆக உயர்ந்து ள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை தெரி வித்துள்ளது.   தில்லியில் 142 பேருக்கும், மகாராஷ்டிராவில் 141, கேரளாவில் 57,  குஜராத்தில் 49,  இராஜஸ்தான் 43, தெலுங்கானா 41, தமிழ்நாடு 34, கர்நாட கம் 31,  மத்திய பிரதேசம் ஒன்பது, ஆந்திரா ஆறு, மேற்கு வங்காளம் ஆறு,  ஹரியானா நான்கு, ஒரிசா நான்கு,  சண்டிகார் மூன்று, காஷ்மீர் மூன்று, உத்தரபிரதேசம் இரண்டு, இமாச்சல பிரதேசம் ஒருவர், லடாக்கில் ஒருவர், உத்தரகாண்டில் ஒருவர் என மொத்தம் 578 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  தில்லியில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட 142 பேரில் இதுவரை 23  பேர் குணமடைந்துள்ளனர் என்றும் மராட்டிய மாநிலத்தில் ஒமைக்ரான் தொற் றால் பாதிக்கப்பட்ட 141 பேரில் இதுவரை 42 பேர் குணமடைந்துள்ளனர் என்றும்  சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.