states

நீதிபதிகள், ராணுவ அதிகாரிகளையும் அமலாக்கத்துறை விசாரிக்க அதிகாரம்!

புதுதில்லி, மார்ச் 11- ஒன்றிய பாஜக அரசு, பணமோசடி தடுப்புச் சட்ட விதிகளில் மாற்றம் செய்துள்  ளது. இதன்மூலம் ராணுவ அதிகாரிகள்,  நீதிபதிகளையும் கூட  அமலாக்கத்துறை யின் தனது விசாரணை வளையத்திற்குள் கொண்டு வருவதற்கு அதிகாரம் வழங்கி யுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்றம் மற்றும்  பணமோசடியைத் தடுக்கவும், பணமோசடி யில் இருந்து பெறப்பட்ட சொத்துக்களை பறிமுதல் செய்யவும், பணமோசடி தடுப்பு சட்டம் - 2002 கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தின்கீழ் ஏற்படுத்தப்பட்ட விதிகள் கடந்த 2005 முதல் நடைமுறைக்கு வந் தன. இந்நிலையில் பணமோசடி தடுப்புச் சட்டத்தில் மேலும் சில விதிகளை ஒன்றிய  அரசு மாற்றியுள்ளது. இதன்படி லாப  நோக்கற்ற அமைப்புகளையும் (என்ஜிஓ),  அரசியல் ரீதியாக குற்றம் சாட்டப்பட்ட நபர்  களையும் கடுமையான கண்காணிப்பின் கீழ் கொண்டு வரமுடியும் என்றாக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து ஒன்றிய அரசின் நிதிய மைச்சக வட்டாரங்கள் கூறியிருப்பதாவது: “பணமோசடி தடுப்புச் சட்டத்தின் விதி களில் மாற்றங்கள் செய்தது தொடர்பாக, மார்ச் 7 அன்று ஒன்றிய அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதன்படி, அரசி யல் ரீதியாக குற்றம் சாட்டப்பட்ட நபர்கள்,  வெளிநாட்டில் பணிபுரிபவர்கள், மூத்த அர சியல்வாதிகள், அரசியல் கட்சிகளின் நிர்  வாகிகள், மூத்த அதிகாரிகள், நீதிபதிகள், ராணுவ அதிகாரிகளையும் அமலாக்கத் துறை விசாரிக்க முடியும். லாப நோக்க மற்ற அமைப்புகளின் தன்மை மற்றும் பரி வர்த்தனை செய்யப்பட்ட பணம் குறித்த பதிவை வங்கிகள் வைத்திருக்க வேண்டும்.  அமலாக்கத் துறை விசாரணை வளையத்  தில் உள்ளவர்களின் வங்கி பரிவர்த்தனை பதிவுகளை வங்கி நிர்வாகம் வைத்திருக்க வேண்டும். மேற்கண்ட பதிவுகளை விசா ரணை அமைப்புகள் கோரினால் அவர் களுக்கு பகிர வேண்டும்.”  இவ்வாறு நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.