states

img

மெகுல் சோக்சியை அழைத்து வரப்போவதாக திரைக்கதை வெளியிட்டு மீண்டும் ஏமாற்றும் மோடி அரசு

மெகுல் சோக்சியை அழைத்து வரப்போவதாக  திரைக்கதை வெளியிட்டு மீண்டும் ஏமாற்றும் மோடி அரசு

நீரவ் மோடி கைது செய்யப்பட்டு 5 ஆண்டுகள் ஆகியும் இன்னும் இந்தியா அழைத்து வரவில்லை

பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த வர் நீரவ் மோடி (54). பிரபல வைர வியாபாரியான இவர் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.28,000 கோடி (கூட்டாளிகளின் அனைத்து மோசடிகளும் சேர்த்து) அளவில் கடன் மற்றும் மோசடி யில் ஈடுபட்டார். இந்த வங்கி கடன் மோசடி தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. ஆனால் (2018ஆம் ஆண்டு) நீரவ் மோடி வெளி நாட்டிற்கு தப்பிச் சென்றுவிட்டார். நீரவ் மோடி குஜராத்தைச் சேர்ந்த வர் என்பதால், நீரவ் மோடியை  வேண்டுமென்றே அமலாக்கத் துறை தப்பிக்க விட்டதா? என்ற சந்தேகம் எழுந்தது. ஓராண்டு கழித்து, அதாவது 2019 மார்ச் 20ஆம் தேதி ஒன்றிய அரசாங்கம் அளித்த வாரண்ட் அடிப்படையில் நீரவ் மோடி இங்கிலாந்து தலை நகர் லண்டனில் கைது செய்யப் பட்டார். மாமனாரும் ஓட்டம் - கைது இதே போன்று நீரவ் மோடி யின் மாமனார் மெகுல் சோக்சி மற்றும் அவரது குடும்பத்தினர் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,850 கோடி கடன் (நீரவ் மோடி யின் கூட்டுக் கடன்) பெற்று மோசடி செய்ததாக 2018இல் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது. வழக்குப்பதிவு செய்து சம்மன் அனுப்பியதும், நீரவ் மோடி பாணியில் மெகுல் சோக்சி வெளிநாடு பறந்துவிட்டார். ஆண்டிகுவா உள்ளிட்ட நாடுக ளில் சுற்றித் திரிந்த மெகுல் சோக்சி, கடந்த வாரம் மருத்துவ சிகிச்சைக் காக சுவிட்சர்லாந்து செல்ல தனது மனைவி மூலம் தற்காலிக பெல்ஜியம் குடியுரிமை பெற்று அங்கு தங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் மும்பை நீதிமன்றம் மூலம் பிறப்பிக்கப்பட்ட கைது வாரண்ட் உள்ளிட்ட ஆவணங்களை காட்டி மெகுல் சோக்சியை கைது செய்ய பெல்ஜியம் அதிகாரிகளிடம் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் வலியுறுத்தப்பட்டது. இதன்மூலம் பெல்ஜியம் காவல் துறையினர் ஏப்ரல் 12ஆம் தேதி மெகுல் சோக்சியை கைது செய்து  சிறையில் அடைத்தனர். இத் தகவலை பெல்ஜியம் வெளியுறவு அமைச்சகம் கடந்த வாரம் உறுதி செய்து, ஒன்றிய அரசிற்கு தெரி வித்தது. இதைத் தொடர்ந்து பெல்ஜியத்தில் சட்ட நடவடிக்கை மூலம் மெகுல் சோக்சியை இந்தி யாவுக்கு அழைத்து வர இந்திய அதிகாரிகள் குழு விரைவில் பெல்ஜியம் செல்ல உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் பிரதமர் மோடி - அமித் ஷாவுக்கு மிக நெருக்கமானவரும், ஒன்றிய சட்டத்துறை அமைச்சரு மான அர்ஜூன் ராம் மேக்வால், “மெகுல் சோக்சி கைது செய்யப் பட்டுள்ளது இந்தியாவுக்கு பெருமை அளிக்கக் கூடியது. பிரதமர் மோடி தலைமையின் கீழ் ஒன்றிய அரசின் வெற்றிகரமான சர்வதேச உறவுகளால் மட்டுமே இந்த கைது நடவடிக்கை சாத்தி யமாகி இருக்கிறது. இது இந்தி யாவுக்கு, மோடி அரசுக்கு கிடைத்த வெற்றி” என மீண்டும் அமைச்சர் பதவி கொடுத்ததற்காக மோடி புகழ் பாடினார். கட்டுக்கதை : ஏமாற்றும் மோடி அரசு 1.விஜய் மல்லையா: பல்வேறு வங்கிகளில் கடன் பெற்று ரூ.6,203 கோடி நிலுவைத் தொகையுடன் கடந்த 2016ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டிற்கு தப்பிச் சென்றார் கிங்பிஷர் மது பான குழுமத்தின் தலைவர் விஜய் மல்லையா. அவரை பொருளாதார குற்றவாளி என அறிவித்த மோடி அரசு, இந்தியாவில் இருந்த அவ ருடைய சொத்துக்களை அமலாக் கத்துறை மூலம் பறிமுதல் செய்தது. இந்த சொத்துக்களின் மதிப்பு ரூ.14,000 கோடிக்கு மேல் எனக் கூறப்படுகிறது. தொடர்ந்து இந்தியா அளித்த சம்மன் அடிப்படையில் 2017 அக்டோபர் 3 அன்று லண்டனில் பணமோசடி வழக்கின் ஒரு பகு தியாக விஜய் மல்லையா கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடு விக்கப்பட்டார். ஆனால் கடந்த 8  ஆண்டுகளாக விஜய் மல்லை யாவை இந்தியா கொண்டு வர சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருவ தாக மோடி அரசு டிரைலர் அறி விப்பை மட்டுமே அடிக்கடி வெளியிட்டு வருகிறது. நாடு கடத்த மோடி அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. விஜய் மல்லையா இந்தியாவில் இருந்த தை விட லண்டனில் சொகுசு  வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.  2.நீரவ் மோடி :  நீரவ் மோடி இந்தியாவின் பண மோசடி சம்மன்படி இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனில் 2019 மார்ச் 19 அன்று கைது செய் யப்பட்டார். தற்போது லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஏப்ரல் 2021இல் அப்போதைய இங்கி லாந்து உள்துறை செயலாளர் பிரிதி படேல், நீரவ் மோடியை நாடு கடத்த உத்தரவிட்டார். ஆனாலும் இன்று வரை நீரவ் மோடி சிறை யில் தான் உள்ளார். “வளர்ந்த இந்தியாவை அமைப்போம்” என்ற 11 ஆண்டு கால வெற்று முழக்கங்களை போல கடந்த 6 ஆண்டுகளாக  ஒவ்வொரு தருணத்திலும் விஜய் மல்லையா, நீரவ் மோடியை நாடு கடத்தி கடு மையான தண்டனை பெற்றுக் கொடுப்போம் என மோடி அரசு கூறி நாட்டு மக்களை ஏமாற்றி வரு கிறது.  ஆனாலும் விஜய் மல்லையா 9 ஆண்டுகளாகவும், நீரவ் மோடி (சிறையிலும் சொகுசு வாழ்க்கை இருக்கலாம்) 6 ஆண்டுகளாகவும் வெளிநாட்டில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். மீண்டும் டிரைலர் நிலைமை இவ்வாறு உள்ள சூழலில், தற்போது மெகுல் சோக்சி யையும் இந்தியா கொண்டு வரு வோம் என புதிய டிரைலரை வெளி யிட்டுள்ளது மோடி அரசு. மோடி யின் பிரதமர் பதவிக்காலம் முடியும் முன்பாவது ஒன்றிய பாஜக அரசு விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்சி உள்ளிட்ட கடன் கொள்ளையர்களை இந்தியா கொண்டு வருமா? என்ற கேள்வி வலுவாக கிளம்பியுள்ளது. ஆனாலும் வக்பு சட்டம், ஆளுநர் விவகாரம், மோடி அரசு க்கு எதிரான உச்சநீதிமன்ற கண்ட னம் உள்ளிட்ட சம்பவங்கள் நிகழ்ந்து வரும் சூழலில் கடன் கொள்ளையரான மெகுல் சோக்சி  விவகாரத்தை வைத்து நாட்டு மக்க ளை திசை திருப்பும் வேலைகளை ஒன்றிய பாஜக அரசு மேற் கொண்டு வருகிறது என்பது மட்டும் மிக நன்றாக புரிகிறது.