மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிகாஷ் ரஞ்சன் பட்டாச்சார்யா, ஜான் பிரிட்டாஸ், பினோய் விஸ்வம், சந்தோஷ்குமார், கே.சுப்பராயன் ஆகியோர் கொண்ட குழு, மணிப்பூரில் கடுமையாக பாதிப்புக்குள்ளான மக்கள் அதிகமாக தங்க வைக்கப்பட்டுள்ள சூரசந்த்பூர் பகுதிக்குச் சென்றனர். பின்னர் அவர்கள் ஆளுநரைச் சந்தித்தனர். தொடர்ந்து அங்கே நடைபெற்ற அமைதி சிறப்பு மாநாட்டிலும் (Peace convention) பங்கேற்றனர்.