ஸ்ரீநகர், பிப்.5- ‘தேகாஷ்மிர்வாலா’ என்ற ஆன் லைன் செய்தி இதழின் தலைமை ஆசிரி யர் பஹத் ஷா கைது செய்யப்பட்டுள்ள தாக, ஜம்மு - காஷ்மீர் காவல்துறை தெரிவித்துள்ளது. “சில முகநூல் பயனர்கள் மற்றும் இணையதளங்கள், தேச விரோதமான புகைப்படங்கள், வீடியோக்கள், பதிவு கள் உள்ளிட்டவற்றை பொதுமக்களி டையே பரப்பி சட்டம் ஒழுங்கைச் சீர் குலைத்து அச்சத்தை ஏற்படுத்தும் வகை யில் குற்ற நோக்கத்துடன் பதிவிட்டு வரு கின்றனர். அந்த வகையில் ‘தேகாஷ்மிர் வாலா’ என்ற ஆன்லைன் செய்தி இதழின் தலைமை ஆசிரியர் பஹத் ஷா, நாட்டிற்கு எதிரான தவறான எண்ணம் மற்றும் அதிருப்தியை ஏற்படுத்தியதோடு, சட்ட அமலாக்க முகமைகளின் பிம்பத்தை யும் சிதைத்தார். இந்த விவகாரம் தொடர்பான விசாரணையின்போது, பஹத் ஷா கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும், இது தொடர்பான விசாரணை நடை பெற்று வருகிறது”
என்று புல்வாமாவில் உள்ள மாவட்ட காவல்துறை தெரிவித் துள்ளது. இந்த கைது நடவடிக்கைக்கு, ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவருமான மெக பூபா முப்தி கண்டனம் தெரிவித்துள்ளார். “உண்மைக்காக நிற்பது தேச விரோ தமாக கருதப்படுகிறது. ஆழ்ந்த சகிப் புத்தன்மையற்ற மற்றும் சர்வாதிகார அரசாங்கத்திற்கு- அவர்களின் செயல் பாடுகளை சுட்டிக் காட்டுவதும்கூட தேச விரோதமாகி விடுகிறது. பஹத்தின் பத்தி ரிகைப் பணி, ஒன்றிய அரசுக்கு அதன் விரும்பத்தகாத அடிப்படை யதார்த் தத்தை வெளிக்காட்டுகிறது” என்று கூறி யுள்ள மெகபூபா முப்தி, “எத்தனை பஹத் களை கைது செய்வீர்கள்?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.