லக்னோ, பிப்.21- உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் தில்லி - மீரட் அதிவிரைவு சாலையில் தனியார் நிறுவனம் ஒன்று ஏர் இந்தியா விமானத்தை 100 இருக்கைகள் கொண்ட உணவகமாக மாற்ற உள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து விமான நிலைய ஆணையத்திடம் இருந்து ஏலத்தில் எடுத்த ஏர் பஸ் ஏ-320 ரக விமானத்தை உணவக மாக மாற்ற திட்டமிட்டுள்ளன. இந்த திட்டத்தை செயல்படுத்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தனியார் நிறு வனத்துக்கு தில்லி - மீரட் அதிவிரைவு சாலை யில் 5 ஹெக்டேர் நிலத்தை 15 ஆண்டுகள் குத்தகைக்கு கொடுத்துள்ளது. வரும் ஏப்ரல் மாதம் முதல் விமான உண வகம் செயல்படத் தொடங்கும் என தெரி விக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அந்த விமானம் அந்த பகுதிக்கு கொண்டுவரப் பட்டு, அதன் உள்ளே உணவகம் போல மாற்றி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.