states

புதிய ஆற்றலுடன் பயணிப்போம்: பிரியங்கா காந்தி

புதுதில்லி,மார்ச் 10- 5 மாநில தேர்தல் முடிவுகளில் மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம் என்று  காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கூறியுள்ளார். உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தர கண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி கடும் பின்னடைவை சந்தித்து உள்ளது. இந்த நிலையில், மக்களின் தீர்ப்பை ஏற்றுக் கொள்வதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள் ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம்; எங்களது யுத்தம் தற்போது தான் தொடங்கியுள்ளது, தைரியம் மற்றும் புதிய ஆற்றலுடன் தொடர்ந்து பயணிப்போம் என்று தெரிவித்துள்ளார்.