புதுதில்லி, மே 24- தில்லி யூனியன் பிரதேச அர சாங்கத்தின் உரிமைகளைப் பறித்திடும் ஒன்றிய அரசாங்கத்தின் அவசரச் சட்டத் திற்கு எதிராக இடதுசாரிக் கட்சிகள் சார்பில் மே 24 புதன்கிழமையன்று தில்லியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தில்லி யூனியன் பிரதேச அரசாங்கத்தின் உரிமை களை உயர்த்திப்பிடித்து சமீபத்தில் உச்சநீதி மன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசமைப்புச்சட்ட அமர்வாயம் அளித்திட்ட தீர்ப்பினை செல்லாததாக்கி, ஒன்றிய பாஜக அரசாங்கம் பிறப்பித்துள்ள அவ சரச் சட்டத்திற்கு இடதுசாரிக் கட்சிகள் கண்ட னம் தெரிவித்துள்ளன. இவ்வாறு அவ சரச்சட்டம் பிறப்பித்திருப்பது நீதிமன்ற அவமதிப்பு மட்டுமல்ல, அரசமைப்புச் சட்டத்தின் கூட்டாட்சி அம்சத்தின் மீதும், உச்சநீதிமன்றத்தால் வரையறுக்கப்பட்ட ஜனநாயக அரசாங்கத்தின் செயல்பாடுகள் மீதும், அவை மக்களுக்குப் பதில் சொல் லும் பொறுப்பு ஆகியவற்றின் மீதும் நேரடித் தாக்குதல்களாகும். அவசரச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி இடதுசாரிக் கட்சிகள் சார்பில் புதுதில்லியில் உள்ள நாடாளுமன்ற வீதி யில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தில்லி மாநிலச் செயலாளர் கே.எம்.திவாரி, இந்தி யக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தினேஷ் வர்ஷ்னே, இந்தியக் கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்)கட்சி சார்பில் ரவி ராய் ஆகியோர் கண்டன உரையாற்றி னர். (ந.நி.)