states

பிராந்திய மொழிகள் இல்லாத ஐஆர்சிடிசி இணையதளம்

புதுதில்லி, ஜூன் 6- ரயில்வேயின் ஐஆர்சிடிசி இணையதளத்தில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பிராந்திய மொழிகளையும் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.  இணையதளம், செயலி வழியாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யப்படுவது, அதிகரித்து வருகிறது. தற்போதுள்ள நிலவரப்படி, 80 சதவீதத்துக்கும் மேற் பட்டோர், இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான ஐஆர்சிடிசி இணையதளத்தில் முன்பதிவு செய்கின்றனர். ஆனால், இதில் தகவல்கள் அனைத் தும் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே உள்ளன. இதனால், பிராந்திய மொழி பேசும் மக்கள் மற்றவர்க ளின் உதவியை நாட வேண்டியுள்ளது. எனவே, குறைந்தபட்சமாக அதிக மக்கள் பேசும், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பிராந்திய  மொழிகளிலும், இந்த சேவையை பெறும் வகையில் இணையதளத்தை மேம்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.