அமெரிக்காவின் “கிளைமேட் சென்ட்ரல்” என்ற விஞ்ஞானி கள் அமைப்பு, மாறிவரும் காலநிலை குறித்தும், வெப்பநிலை ஏற்படுத்தும் தாக்கம் குறித்தும் அவ்வப்போது அறிக்கைகளை வெளி யிட்டு வருகிறது. அதன்படி சமீபத்தில் வெளியிட்ட காலநிலை அறிக்கையில், “கடந்த ஜூன் முதல் ஆகஸ்ட் வரை யிலான மாதங்களில் பூமியின் வளி மண்டலத்தில் ஏற்பட்டுள்ள கார்பன் மாசுபாட்டால் வழக்கத்தைவிட இரு மடங்கு வெப்பநிலை அதிகரித்துள் ளது. இதனால் உலகின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 98% பேர், அதா வது 800 கோடி பேர் கார்பன் மாசு பாட்டு பாதிப்பை அனுபவித்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளது. மேலும், வரலாற்றில் கடந்த ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட் டமே உலகளவில் மிக வெப்பமான கோடை காலமாக பதிவாகியுள்ளது. முக்கியமாக இந்த காலநிலை மாற் றத்தால் கேரளா, புதுச்சேரி மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகள் என மூன்று இந்தியப் பகுதிகளில் வழக் கத்தைவிட 3 டிகிரி அல்லது அதற்கும் மேலான வெப்பநிலை பதிவாகியுள் ளது. கிட்டத்தட்ட 60 நாட்களுக்கு இந்த வெப்பநிலை மாற்றம் நீடித்துள்ளது. வரவிருக்கும் வடகிழக்கு பருவமழை யும் பொய்த்தால் கேரளா தீவிர வறட்சி யில் சிக்கும் சூழல் உள்ளது” என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.