மேற்குவங்கத்தில், கல்வி, வேலைவாய்ப்பு, தொழிலாளர்கள் நலன், மக்கள் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வாலிபர் சங்கம் நவம்பர் 2 அன்று மாநிலம் முழுவதும் “இன்சாப் யாத்திரை (நீதிக்கான யாத்திரை)” என்ற பெயரில் நடைபயணத்தை துவங்கியது. இந்த “இன்சாப் யாத்திரை” 25-ஆவது நாளைக் கடந்துள்ள நிலையில், இதனைக் கொண்டாடும் விதமாக மேற்கு பர்துவான் மாவட்டத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் எம்.பி.யும், இடது முன்னணியின் முன்னாள் அமைச்சருமான பன்சா கோபால் சௌத்ரி மற்றும் வாலிபர் சங்க மாநில செயலாளர் மீனாட்சி முகர்ஜி ஆகியோர் உரையாற்றினர். ராஜ்பந்தில் இருந்து மீண்டும் “இன்சாப் யாத்திரை” துவங்கியது.