புதுதில்லி, பிப். 18 - ஜவஹர்லால் நேரு போன்ற மாபெரும் ஆளுமைகள் வழிநடத்திய இந்தியா, இன்றைய சூழலில் அர சியல் தரநிலைகள் சீரழிந்து, ஜன நாயகத்தின் மீது நம்பிக்கை சிதைந்து நிற்கிறது என்று சிங்கப்பூர் நாட்டின் பிரதமர் லீ சியென் லூங் கவலை தெரிவித்துள்ளார். ‘ஒரு நாட்டின் ஜனநாயகம் எப்படி செயல்பட வேண்டும்’ என்ற தலைப் பில் சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் லீ சியென் லூங் பங்கேற்றுப் பேசியுள்ளார். அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது: “பல நாடுகள் மிக உயர்ந்த கொள்கைகள், மதிப்பீடுகளின் அடிப் படையில்தான் தொடங்கப்படு கின்றன. ஆனால் நாளடைவில் அரசி யலின் தன்மை மாறிவிடுகிறது. இப் போதுள்ள பல அரசியலமைப்புகள் அதனை தோற்றுவித்தவர்களின் கொள் கைக்கு சம்பந்தமே இல்லாமல் அடையாளம் இழந்து நிற்கின்றன. சுதந்திரத்திற்காக பாடுபட்ட தலை வர்கள் துணிச்சல்மிகு தனித்துவம் மிக்கவர்களாக இருந்தனர். அவர் களின் பண்பாடும், தன்னிகரற்ற திற மையும் அந்த நாடுகளை வளர்த்தன. நெருப்புபோல் தம்முன் நின்ற சோதனைகளைக் கடந்து மக்கள் கொண்டாடும் தலைவர்களாக- தேசத் தலைவர்களாக உருவாகினர்.
இஸ்ரே லின் டேவிட் பென் குரியோன்ஸ், இந்தியாவின் ஜவஹர்லால் நேரு, நமது (சிங்கப்பூர்) பிரதமர் லீ குவான் ஆகியோரைக் கூறலாம். அவர்கள் மக்களின் எதிர்பார்ப்பு களுக்கு ஏற்ப உயர்ந்து நின்று புதிய உலகைக் கட்டமைத்தனர். தம் மக்க ளுக்கு புதிய எதிர்காலத்தை வகுத்த னர். நாடாளுமன்ற ஜனநாயகத்தை நடத்துவதற்கான முன்மாதிரியான விதிமுறைகளையும் நடைமுறை களையும் நிறுவினர். ஆனால், ஆரம்ப நாட்களில் அந்தத் தலைவர்கள் முன்னெடுத்த சீரிய பணிகள் அத்து டன் நின்றுவிட்டன. அதன்பின்னர் வந்த தலைமுறைகள் அதே வேகத்துடனும் துடிப்புடனும் செயல்படவில்லை. பென்-குரியனின் இஸ்ரேல், இரண்டு ஆண்டுகளில் நான்கு பொதுத் தேர்தல்களைச் சந்தித்துள்ளது. இருந்த போதிலும், ஒரு அரசா ங்கத்தை அமைக்க முடியாத ஒன்றாக மாறி நிற்கிறது. இஸ்ரேலில் உள்ள மூத்த அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் கிரிமினல் குற்றச்சா ட்டுகளை எதிர்கொள்கின்றனர், சிலர் சிறைக்கும் சென்றுள்ளனர்.
நேருவின் இந்தியா, ஊடக அறிக்கைகளின்படி - வழக்குகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்று கூறப்பட்டாலும் - நாடாளுமன்றத்தில் உள்ள கிட்டத் தட்ட சரிபாதி எம்.பி.க்கள் மீது பாலி யல் வல்லுறவு மற்றும் கொலைக் குற்றச் சாட்டுகள் உட்பட கிரிமினல் குற்றச் சாட்டுகள் நிலுவையில் உள்ளன. எந்தவொரு நாடாக இருந்தாலும், முதலில் அரசியலின் அமைப்பு மாறு கிறது. அரசியல்வாதிகள் மீதான மரி யாதை குறைகிறது. சில ஆண்டு களுக்குப் பிறகு மேலும் சிறப்பானதை எதிர்பார்க்க முடியாத வாக்காளர்கள் இதுதான் விதி என்று நினைக்கும் சூழல் உருவாகி விடுகிறது. இதனால், அந்தந்த நாடுகளின் அரசியல் தர நிலைகள் சீரழிந்து, நம்பிக்கை சிதை ந்து, நாடு மேலும் வீழ்ச்சியடைகிறது. இவ்வாறு லீ சியென் லூங் பேசியுள் ளார். இதனிடையே, லீ சியென் லூங்கின் இந்தப் பேச்சுக்கு கண்டனம் இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. “சிங்கப்பூர் பிரதமரின் கருத்துக்கள் தேவையற்றவை” என்று கூறியிரு ப்பதுடன், அவரிடன் பேச்சு தொடர் பாக விளக்கம் அளிக்குமாறு, இந்தியா வுக்கான சிங்கப்பூர் தூதருக்கு சம்மனும் அனுப்பியுள்ளது.