தெலுங்கானா மாநிலம் ஹைதரா பாத்தில் உள்ள உசேன்சாகர் ஏரி டேங்க்பண்ட் பீப்பிள்ஸ் பிளாசாவில் 76 ஆவது குடியரசு தின த்தையொட்டி “பாரதமாதா மகா ஆரத்தி” நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது. இதில் ஒன்றிய நிலக்கரித்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி பங்கேற்றார். விழா தொடங்கியபின் உசேன்சாகர் ஏரியின் மத்தியில் படகில் இருந்து பல வண்ண பட்டாசுகளுடன் வாண வேடிக்கை நடைபெற்றது. இதற்காக படகில் பட்டாசுகள் நடு ஏரிக்கு கொண்டு செல்லப்பட்டது. வாணவேடிக்கை துகள் கள் சிதற பட்டாசுகள் இருந்த 2 படகில் திடீரென தீப்பிடித்தது. பட்டாசுகள் முழு வதும் வெடித்து சிதறியது. படகு சுக்கு நூறாக நொறுங்கியது. படகில் இருந்த வர்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள தண்ணீரில் குதித்தனர். எனினும் துர திர்ஷ்டவசமாக 6 பேர் பலத்த தீக்கா யம் அடைந்தனர். தகவல் அறிந்த மீட்புக் குழுவினர் உடனடியாக வந்து தண்ணீரில் தத்தளித்த காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.