states

13 மாநிலங்களவை இடங்களுக்கு மார்ச் 31ல் தேர்தல்

புதுதில்லி, மார்ச் 8 - நாடாளுமன்ற மாநிலங்களவையில் காலியாகும் 13 இடங்களுக்கு மார்ச்  31 ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம்  அறிவித்தது.  பஞ்சாப் மாநிலத்தில் மாநிலங்களவையின் 5 இடங்களும் கேரளாவில் 3, அசாமில் 2, இமாச்சல பிரதேசம், நாகா லாந்து, திரிபுரா ஆகிய மாநிலங்களில் தலா 1 என 6 மாநிலங்களில் உள்ள 13 மாநிலங்களவை இடங்கள் காலியாகிறது.  இந்த இடங்களுக்கு மார்ச் 31 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம்  அறிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின்  மூத்த தலைவர்களான ஆனந்த் சர்மா, ஏ.கே.அந்தோணி, பிரதாப் சிங் பஜ்வா, பஞ்சாப் மாநிலம் சிரோமணி அகாலிதளம் கட்சியைச் சேர்ந்த நரேஷ் குஜ்ரால் உள்ளிட்டோரின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக் காலம் விரைவில் முடிகிறது.  இதையடுத்து, அந்த இடங்களுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. வேட்புமனு தாக்கல் 14 ஆம் தேதி தொடங்கு கிறது. மனு தாக்கலுக்கு மார்ச் 21 கடைசிநாள். மனுக்களை வாபஸ் பெற 24 ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.