states

img

இந்துவோ, முஸ்லிமோ பெற்றோருக்கு நல்ல பிள்ளையாக இருங்கள்!

பஜ்ரங்தள் தொண்டரின் சகோதரி உருக்கம்

பெங்களுரூ, பிப்.24- “இந்து, முஸ்லிம் சகோதரர்கள், தங்க ளது பெற்றோருக்கு நல்ல பிள்ளைகளாக இருந்தாலே போதும்; மற்றெதுவும் வேண்டாம்” என்று ஹர்ஷாவின் சகோதரி வேண்டுகோள் விடுத்துள்ளார். கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் உள்ள சீகேஹ‌ட்டியில் பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்த ஹர்ஷா என்ற 26 வயது இளை ஞர், ஷிவமோகாவில் உள்ள பாரதி காலனி யில் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 20) பிற்பக லில் அடையாளம் தெரியாதவர்களால் குத்திக் கொல்லப்பட்டார்.  இதைமுன்வைத்து, ஆர்எஸ்எஸ், விஎச்பி, பஜ்ரங் தள் உள்ளிட்ட கூட்டத்தி னர், ஷிமோகா, பத்ராவதி மாவட்டங்களில் வன்முறை வெறியாட்டத்தை நடத்தி வரு கின்றனர். கடந்த திங்கட்கிழமை மாலை நடந்த ஹர்ஷாவின் இறுதி ஊர்வலத்திலும் வன்முறை வெடித்தது. இதில் 3 போலீசார், 2 பத்திரிகையாளர்கள் உட்பட 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 10-க்கும்  மேற்பட்ட வாகனங்கள் தீவைத்து எரிக்கப் பட்டன. இந்த நிலையில், கொல்லப்பட்ட ஹர்ஷா வின் சகோதரி அஸ்வினி பேசும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி யுள்ளது. அதில் அவர் கூறியிருப்பதாவது: “ஹர்ஷாவின் முழுப்பெயர் ஹர்ஷா ஜிங்கடே. ஆனால் அவர் தனது குடும்பப் பெயரைப் பயன்படுத்தும் வகை இல்லை. எல்லா இடங்களிலும் ஹர்ஷா... ஹர்ஷா ஹிந்து என்றுதான் கூறிக்கொள்வார். வேறு என்ன சொல்வது என்று எனக்குத் தெரிய வில்லை. எனக்கு இப்போது சகோதரர் இல்லை... சகோதரர்களே... நீங்கள் அனை வரும் முதலில் உங்கள் பெற்றோரின் பிள்ளைகள். பெற்றோர் உங்கள் எதிர்காலத்திற்காக நிறைய பிரச்ச னைகளை எதிர்கொள்கிறார்கள். தயவு செய்து கவனமாக இருங்கள். உங்கள் வாழ்க்கையை ஹர்ஷா போல ஆக்கிக் கொள்ளாதீர்கள். நான் எந்த மதத்தையும், எந்த சாதியையும் சுட்டிக்காட்ட விரும்ப வில்லை. நீங்கள் அனைவரும் சகோதர சகோதரிகள்” என்று உருக்கமாக குறிப் பிட்டுள்ளார்.