ஹவுரா/கொல்கத்தா, பிப்.27- மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் மாணவர் சங்கத் தலைவர் அனிஷ் கான் கொலையாளிகளை தண்டிக்க வலியுறுத்தி ஹவுரா ஊரக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன் வாலிபர்-மாணவர் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மினாட்சி முகர்ஜி, ஸ்ரீஜன் பட்டாச்சார்யா உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கொல்கத்தாவில் இடது முன்னணி சார்பில் நடைபெற்ற பேரணி-ஆர்ப்பாட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் தோழர்கள் பிமன் பாசு, சூர்ய காந்த மிஸ்ரா உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வர்களை ஹவுரா காவல்துறையில் ஈவு இரக்கமின்றி கொடூரமாகத் தாக்கி னர். இதில் வாலிபர் சங்க மேற்கு வங்கத் தலைவர் துருபஜோதி சாஹா கடுமையான தாக்குதலுக்கு உள்ளா னார். அவர் பலத்த காயமடைந்துள் ளார். மேலும் மினாட்சி முகர்ஜி உட்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டித்துள்ளது.