ஆந்திர மாநிலத்தில் கோதாவரி ஆற்றின் மீது எழுப்பப்படும் போலாவரம் பாசன திட்டத்தால் வீடுகள் மற்றும் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களின் பிரச்சனை குறித்து விவாதிக்கும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோதாவரியில் சிறப்பு கருத்தரங்கை நடத்தியது. இந்த கருத்தரங்கில் சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பி.வி.ராகவலு, ஆந்திர மாநில செயலாளர் வி.சீனிவாச ராவ், பிரபல ஆய்வாளரும், எழுத்தாளருமான ஜி.உமாமகேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.