states

img

பாஜக எம்எல்ஏ-வை விரட்டியடித்த ராஜாஜி நகர் தொகுதி மக்கள்!

பெங்களூரு, மே 9 - பெங்களூரு ராஜாஜி நகர் பாஜக மூத்த எம்எல்ஏ சுரேஷ் குமாரை, தொகுதி மக்கள் விரட்டி அடித்த சம்பவம் நடந்துள்ளது. ராஜாஜி நகர் தொகுதியில் கடந்த 2008  முதல் தொடர்ச்சியாக 3 முறை எம்எல்ஏ- வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் சுரேஷ் குமார். தற்போது நான்காவது முறையாக வும் பாஜக அவருக்கே போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த முறை அவர் வெற்றிபெற வாய்ப்பு இல்லை என்று ஆரம்பம் முதலே பேச்சுக்கள் அடிபட்டு வந்தன. இந்நிலையில்தான் ராஜாஜி நகர் தொகுதிக்கு பிரச்சாரத்திற்கு சென்ற சுரேஷ் குமார் அங்கே பொதுமக்களால் விரட்டப் பட்டு உள்ளார். அடிப்படை தேவைகளை நிறைவேற்றவில்லை, தண்ணீர் பிரச்ச னையை தீர்க்கவில்லை, சாலைகளை சரி யாக போடவில்லை. குறிப்பாக, கொரோனா  நேரத்தில் கூட அரிசியை ஒழுங்காக விநியோகம் செய்யவில்லை என்று குற்றம் சாட்டிய பொதுமக்கள், அப்படியிருந்து விட்டு, இப்போது வாக்கு கேட்டுவர அசிங்க மாக இல்லையா? என்று கேள்வி எழுப்பி யுள்ளனர். மேலும், சுரேஷ் குமாரை வாக்கு கேட்கவே விடாமல் விரட்டியடித்துள்ளனர். ஆர்எஸ்எஸ் அமைப்பில் இருந்து வளர்ந்து வந்த மூத்தத் தலைவரான இவரை ராஜாஜி நகர் தொகுதி மக்கள் விரட்டி அடித்த சம்பவம், வாக்குப் பதிவுக்கு முன்ன தாகவே பாஜக-வினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சட்டத்துறை அமைச்சர், தொழிலாளர் துறை அமைச்சர் உள்ளிட்ட பதவிகளை வகித்தவரான சுரேஷ் குமார், கடந்த 2019 ஆகஸ்ட் முதல் 2021 ஜூலை வரை  எடியூரப்பா அமைச்சரவையில் கல்வித்துறை அமைச்சராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.