“மழை விட்டும் தூவானம் விடாத கதையாக” கொரோனா தொற்று நோய் விடைபெற்ற பின்னரும் அதனையொட்டிய இளம்வயது மர ணங்கள் தொடர் வதால் இந்தியா வில் ஒருவித அச்ச மான சூழல் நிலவி வருகிறது. வேறெந்த உடல் நலப் பாதிப்பும் இல்லாத இளம் வய தினர் மாரடைப்பால் உயிரிழக்கும் சம்ப வம் மிக மோசமான அளவில் அதிக ரித்து வரும் நிலையில், இதுதொடர்பாக தொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தனி ஆய்வு மேற் கொண்டது.
இந்த ஆய்வில்,”அக்டோபர் 1, 2021 - மார்ச் 31, 2023-க்கு இடையில் புரிந்து கொள்ள முடியாத காரணங்களால் உயி ரிழந்த 18-45 வயதுடைய ஆரோக்கிய மான நபர்கள், அடிப்படை உடல்நலப் பிரச்சனைகள் இல்லாதவர்கள். இளம் வயதினரின் திடீர் இறப்புக்கு கொரோனா தடுப்பூசிகள் காரணமல்ல என்றாலும், கடு மையான கொரோனா பாதிப்பின் பிந் தைய பக்கவிளைவுகள், அதிகப்படியான குடி, இதர மருந்துகள் அல்லது மருத்து வப் பயன்பாடுகள் ஆகியவையே திடீர் மரணங்களின் பின்னணியாக உள்ளன. நவம்பர் மாத அதிகாரப்பூர்வமாக வெளி யாகும்போது இளம்வயது மரணங்கள் தொடர்பான முழுமையான பின்னணியை கண்டறிய முடியும்” என ஐசிஎம்ஆர் கூறி யுள்ளது.
அதாவது இப்போதைக்கு இளம் வயது இந்தியர் மரணங்களின் பின்னணி யில் கொரோனா தடுப்பூசி இல்லை என ஐசிஎம்ஆர் ஆய்வு உறுதிபட தெரிவிக்கி றது என்பது குறிப்பிடத்தக்கது.