சண்டிகர் யூனியன் பிரதேச நிர்வாகத்தின் ஊழியர்களுக்கு மத் திய சிவில் சேவை விதி களை ஒன்றிய பாஜக அரசு அறிமுகப்படுத்தி யுள்ள நிலையில், இது கடந்த கால புரிந்து ணர்வுக்கு முற்றிலும் எதிரானது என்று பஞ்சாப் ஆம் ஆத்மி அரசு சட்டமன்றத்தில் கூறியுள்ளது. மேலும், சண்டிகரை முழு மையாகப் பஞ்சாப்பிற்கு மாற்ற வேண்டும் என்றும் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு தீர்மானம் நிறை வேற்றியுள்ளது.