states

img

எதிர்க்கட்சிகளை காங்கிரஸ் இணைக்குமானால் 2024-இல் பாஜக 100 இடங்களைத் தாண்டாது!

பாட்னா, பிப். 20 - காங்கிரஸ் முயற்சியெடுத்து எதிர்க்கட்சி களை ஓரணியில் திரட்டுமானால், 2024 மக்க ளவைத் தேர்தலில் பாஜக-வை 100 இடங்களுக்குள் அடக்கிவிட முடியும் என்று ஐக்கிய ஜனதாதளம் கட்சித் தலைவரும், பீகார் முதல்வருமான நிதிஷ்குமார் பேசியுள்ளார். சிபிஐ (எம்எல்) கட்சியின் தேசிய மாநாட்டில் நிதிஷ் கலந்து கொண்டு, “ஜனநாயகத்தைக் காப்பாற்றுங்கள், அரசியலமைப்பைக் காப்பாற்றுங்கள், பாசிசத்தை விரட்டுங்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார். அப்போ துதான் இதனை அவர் தெரிவித்துள்ளார். “‘சமாதன் யாத்திரையை’ நான் இப்போது தான் முடித்து வந்தேன். அது நன்றாக முடிந்தது. நான் இப்போது தயாராக இருக்கி றேன் (பீகாருக்கு வெளியே சென்று எதிர்க்கட்சி  ஒற்றுமைக்காக பணியாற்ற) பல எதிர்க்கட்சி களில் இருந்து எனக்கு அழைப்பு வருகிறது. காங்கிரஸ் சிக்னலுக்காக மட்டுமே காத்திருக்  கிறேன். நான் இப்போது தேசிய எதிர்க்கட்சி  ஒற்றுமைக்காக உழைக்கத் தயாராக இருக் கிறேன். நீங்கள் (மேடையில் அமர்ந்திருந்த காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித்தைப் பார்த்து...) என்னைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.  நான் காங்கிரஸ் கட்சி நண்பர்களுக்கு ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். ராகுல் காந்தியின் ‘இந்திய ஒற்றுமை யாத்தி ரை’ நல்ல வெற்றியை பெற்றுள்ளது. இதை  இத்தோடு நிறுத்திவிடாமல், காங்கிரஸ் கட்சி பாஜகவுக்கு எதிரான கூட்டணியை கட்டமைக்க வேண்டும். பழம் பெருமையை பேசி குளிர் காய்வதை காங்கிரஸ் நிறுத்திவிட்டு, எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்க வேண்டும். எனக்கென்று எந்த எதிர்கால ஆசைகளும் இல்லை. எனது அறிவுரையை கேட்டு காங்கிரஸ் கட்சி நடந்தால், தற்போது 300 இடங்களுடன் தனிப்பெரும்பான்மை ஆட்சியில் உள்ள பாஜக வரும் தேர்தலில் 100 இடங்களுக்கு கீழ் சுருண்டு விடும். இல்லை என்றால் 2024-இல் என்ன நடக்கும் என்று உங்களுக்கே தெரியும். பீகாரில் நாங்கள் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறி, அக்கட்சி மாநிலத்தில் தடம்பதிப்பதை நிறுத்தி காட்டியுள்ளோம். இதை நாம் தேசிய அளவிலும் ஒன்றிணைந்து சாதித்து காட்ட வேண்டும்.” இவ்வாறு நிதிஷ்குமார் பேசியுள்ளார். அவருக்கு அந்த மேடையிலேயே பதி லளித்த காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித், “எனக்கு தெரிந்த மற்றும் நான் கட்சி யைப் புரிந்து கொண்ட வரையில், காங்கிரஸும் இதே நிலையையே (எதிர்க்கட்சி ஒற்றுமை குறித்து) சிந்தித்து வருகிறது என்று என்னால்  கூற முடியும். இதுபற்றி கட்சி மேலிடத்திற்கு தெரிவிப்பேன் என்றார். மேலும், “காத லிக்கும்போது, ​​​முதலில் யார் ‘ஐ லவ் யூ’ சொல்வது என்பதுதான் விஷயம்” என்றும் கலகலப்பான பதிலை அளித்தார்.