states

img

இந்தியாவில் எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டம் ஒரு கட்சிக்கு அல்ல; ஒரு கட்டமைப்புக்கு எதிரானது!

ராகுல் காந்தி பேட்டி

புதுதில்லி, மார்ச் 6 - இந்தியாவில் தாங்கள் அரங்கேற் றும் அனைத்து அடக்குமுறைகளையும் எதிர்க்கட்சிகள், ஊடகங்கள் மவுனமாக வேடிக்கை பார்க்க வேண்டும் என்று ஆளும் பாஜக விரும்புவதாக காங் கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியுள்ளார். மேலும், இந்தியாவில் எதிர்க்கட்சி கள் ஆளுகின்ற ஒரு கட்சிக்கு எதிராக அல்லாமல், ஆர்எஸ்எஸ் விரும்பும் இந்துத்துவா கட்டமைப்புக்கு எதிரான போராட்டம் என்றும் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, லண்டன் ஊடகங்களுக்கு அளித்த பேட்டி யில் இதுதொடர்பாக மேலும் கூறியிருப்ப தாவது: புதுதில்லியிலும் மும்பையிலும் உள்ள பிபிசி அலுவலகங்களில் அண் மையில் நடைபெற்ற தணிக்கை நட வடிக்கையானது நாடெங்கிலும் விமர் சனக் குரலை ஒடுக்கும் நடவடிக்கைக்கு ஓர் உதாரணமாகும். நான் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற் கொள்வதற்கு இதுபோன்ற நடவடிக்கை களே என்னைத் தூண்டின. நாட்டின் வாயை மூடச்செய்ய ஆளும் பாஜக எடுக்கும் முயற்சிக்கு எதிராக எழும்பிய குரலே எனது யாத்திரையாகும். ஜன நாயகத்தின் அமைப்புகள் மீது தொடுக்கப் படும் மிருகத்தனமான தாக்குதலே, எனது யாத்திரைக்கான அவசியத்தை ஏற்படுத்தியது. ஊடகங்கள், அமைப்பு கள், நீதித்துறை, நாடாளுமன்றம் ஆகிய அனைத்தும் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றன. 

இந்தியாவில் நடப்பதை பிபிசி தற்போதுதான் பார்க்கிறது. ஆனால் கடந்த ஒன்பது ஆண்டுகளாக இதுதான் நடந்து வருகிறது. செய்தியாளர்கள் அச்சுறுத்தப்படுவதுடன் தாக்கப்படு கின்றனர் என்பது அனைவருக்கும் தெரியும். அரசுக்கு இணக்கமாகச் செல்லும் செய்தியாளர்கள் பரிசளிக்கப் பட்டு கவுரவிக்கப்படுகின்றனர். பிபிசி-யும் கூட, இந்திய அரசுக்கு எதிராக எழுதுவதை நிறுத்தினால் அனைத்தும் சரியாகி விடும். அவர்களுக்கு எதிரான வழக்குகளும் காணாமல் போய்விடும். இந்தியா மவுனமாக இருக்க வேண்டும் என்று பாஜக விரும்புகிறது. ஏனெனில் இந்தியாவுக்குச் சொந்த மானதை எடுத்து தங்கள் நெருங்கிய நண்பர்களுக்கு வழங்க அவர்கள் விரும்புகின்றனர். மக்களின் கவனத்தை திசைதிருப்பி இந்தியாவின் வளங்களை மூன்று, நான்கு, ஐந்து பேரிடம் வழங்கு வதே அவர்களது எண்ணமாகும். அடுத்த மக்களவைத் தேர்தலுக்கு காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகளின் திட்டம் என்ன என்று கேட்கிறீர்கள். தேர்தல் மோதல் என்பது அரசியல் கட்சி களுக்கு இடையிலானது மட்டுமின்றி அமைப்புகளுக்கு எதிரான மோதலையும் உள்ளடக்கியது. இந்திய அரசியலில் அனைவருக்கும் பொதுவான சரிசம மான களம் இல்லை.

எதிர்க்கட்சிகளிடையே ஒருங்கி ணைந்து செயல்படுவது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரு கின்றன. ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக ஆகி யவை தோற்கடிக்கப்பட வேண்டும் என்ற சிந்தனை எதிர்க்கட்சிகளிடையே ஆழ மாக வேரூன்றியுள்ளது. அதில் எந்த சந்தேகமும் இல்லை. பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக விவாதம் நடத்தப்பட வேண்டியுள்ளது. இந்தியா வில் உள்ள எதிர்க்கட்சிகள் ஓர் அரசியல் கட்சியை எதிர்த்துப் போராடவில்லை. ஒரு கட்டமைப்பை எதிர்த்துப் போராடி வருகிறோம். இந்தியாவின் அனைத்து அமைப்புகளையும் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக ஆகியவை கைப்பற்றிவிட்டன.  நான் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழ கத்தில் ஆற்றிய உரையின்போது அந்நிய மண்ணில் இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக இந்திய அரசு குற்றம்சாட்டுகிறது. எனது  நாட்டின் பெயரை எப்போதும் நான் சீர்குலைத்ததில்லை. அதை நான் எப்போதும் செய்ய மாட்டேன். வெளிநாடு களுக்குச் செல்லும்போது இந்தியாவின் நற்பெயரை சீர்குலைப்பவர் யார் என்றால்  அது இந்தியப் பிரதமர்தான். கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் எதுவும் நடைபெறவில்லை என்று அவர் கூறுவது வழக்கம். அப்படியானால் அந்தப் பத்தாண்டுகளில் இந்தியாவுக்காக பாடு பட்டவர்கள் பற்றி என்ன கூறுவது? அவர் களை பிரதமர் மோடி அவமதிக்க வில்லையா?. இவ்வாறு ராகுல் காந்தி அவரது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.