states

img

கர்நாடக பட்ஜெட் மூலம் மத வன்முறையை தூண்ட பாஜக திட்டம்

கர்நாடக பட்ஜெட் மூலம் மத வன்முறையை தூண்ட பாஜக திட்டம்

2025-26ஆம் ஆண்டுக்கான கர்நாடக மாநில பட்ஜெட்டை அம்மாநில முதலமைச்சரும், நிதியமைச்சருமான  சித்தராமையா வெள்ளிக் கிழமை அன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பெங்களூருக்கு பல்வேறு சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக  பெங்களூரில் 40.5 கிலோமீட்டர் தொலைவுக்கு ரூ.8,916 கோடி மதிப்பீட்டில் இரட்டை அடுக்கு மேம்பாலம், சுரங்கப் பாதை, மானிய திட்டத்தில் அதிக நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த பட்ஜெட்டை குறைகூறி கர்நாடகாவில் மத வன்முறையை தூண்ட பாஜக திட்டமிட்டுள்ளது. கர்நாடக பாஜக மூத்த தலைவரும், ஒன்றிய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சருமான பிரகலாத் ஜோஷி கர்நாடக பட்ஜெட் முஸ்லிம்களுக்கான பட்ஜெட் எனக் கூறி வன்முறையை தூண்டும் வகையில் வெறுப்புப் பேச்சை கக்கியுள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “கர்நாடக காங்கிரஸ் அரசின் பட்ஜெட் முஸ்லிம் களுக்காக உள்ளது. மற்ற சமூகங்களைப் பற்றி மாநில அரசு ஒருபோதும் கவலைப்பட வில்லை. பட்ஜெட்டின் வாசிப்பின் போது குறைந்தது 100 முறைகளுக்கும் மேலாக முஸ்லிம்களின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. இது மிகவும் வருத்தத்திற்குரியது மட்டுமின்றி மிகவும் சமூக விரோதமான பட்ஜெட்” எனக் கூறினார்.