ராஜஸ்தானில் ரூ. 4.58 கோடி வங்கிப் பணம் கையாடல்
பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநி லத்தின் கோட்டா மாவட்டத் தில் ஐசிஐசிஐ வங்கி உள் ளது. இந்த தனியார் வங்கியில் வாடிக் கையாளர்களின் பணத்தைக் கையாடல் செய்து, அதனை பங்குச்சந்தையில் முத லீடு செய்த வங்கி மேலாளரான சாக்சி குப்தா என்பவர் கைது செய்யப்பட்டார். கடந்த 2020 முதல் 2023ஆண்டு வரை யில் 41 வாடிக்கையாளர்களின் 110 கணக்குகளில் இருந்து ரூ.4.58 கோடி ரூபாயை சட்டவிரோதமாகப் பயன் படுத்தி, அதனை பங்குச்சந்தைகளில் முதலீடு செய்துள்ளார். பரிவர்த்தனை செய்திகளைப் பற்றி வாடிக்கையாளர் களுக்குத் தெரியாமல் இருக்க 41 வங்கி கணக்குகளுடன் இணைக்கப்பட்ட வாடிக்கையாளர்களின் மொபைல் எண்களையும் மாற்றி, தனது குடும் பத்தினரின் மொபைல் எண்களை பயன்படுத்தி மெகா மோசடி மேற்கொண் டுள்ளார். ஆனால், பங்குச்சந்தையில் இழப்பு கள் ஏற்பட்டதால், பணத்தை மீண்டும் கணக்குகளில் செலுத்தத் தவறிவிட்டார். இதனால் அவரின் முறைகேடை அறிந்த காவல்துறையினர் சாக்சி குப் தாவை கைது செய்தனர். புதுதில்லி
குஜராத்தில் 107 பேருக்கு பாதிப்பு சிகிச்சை எண்ணிக்கை 5000-ஐ தாண்டியது
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 498 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் வெள் ளிக்கிழமை அன்று அறிக்கை மூலம் தெரி வித்துள்ளது. அதிகபட்சமாக கேர ளத்தில் 192 பேருக்கும், குஜராத்தில் 107 பேருக்கும், மேற்குவங்கத்தில் 58 பேருக் கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது கொரோனா சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 5,364 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதித்தவர களில் மேலும் 4 பேர் (கேரளத்தில் 2 பேர், கர்நாடகம் மற்றும் பஞ்சாபில் தலா ஒரு வர்) உயிரிழந்தனர். இதன்மூலம் பலி எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை புதிதாக 8 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திறக்கப் படும் நீரின் அளவு விநாடிக்கு 1,600 கனஅடியாக அதிகரித்துள்ளது. முல்லைப் பெரியாறு அணை யின் நீர்மட்டம் 130 அடி உயர்ந்த நிலையில், அணைக்கு நீர்வரத்து 670 கன அடி அதிகரித்தது. பெண்கள் குறைவான ஆடைகள் அணி வதைத் தவிர்க்க வேண்டும் என்று ஒன்றிய அமைச்சர் கைலாஷ் விஜயவர்கியா சர்ச்சைக்குரிய வகையில் கூறியுள்ளார். பெங்களூருவில் நிகழ்ந்த கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் இறந்த விவகாரத்தில், கர்நாடக கிரிக்கெட் சங்க அதிகாரிகளை கைது செய்ய அம்மாநில உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. நெய்க்கு பதில் ரசாயனம் கலந்த பாமாயிலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு “போலே பாபா” நிறுவனம் (உத்தரப்பிரதேசம்) தந்தது அம்பலமானது.
“சாதிவாரி கணக்கெடுப்பை வெளிப்படையாக மேற்கொண்டால் பாஜக முடிவுக்கு வந்துவிடும்”
பீகார் மாநிலம் ராஜிகிர் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி,”பிரதமர் மோடி சரணடை யும் பழக்கத்தைக் கொண்டுள்ளார். அமெ ரிக்க ஜனாதிபதி டிரம்ப் இதுவரை 11 முறை பிரதமர் மோடி சரண்டர் ஆகிவிட்ட தாகக் கூறியுள்ளார். ஆனால் மோடி இதுவரை அதுபற்றி வாய் திறக்க வில்லை. உண்மை என்பதனால்தான் அவர் பேச மறுக்கிறார். என்னுடைய குறிக்கோள் சாதிவாரி கணக்கெடுப்பு தான். மக்களவையில் பிரதமர் மோடி முன்பாகவே இதனை நான் தெரிவித் தேன். மிக முக்கியமான விஷயம் என்ன வென்றால் வெளிப்படையான உண்மை யான சாதிவாரி கணக்கெடுப்பை பாஜக அரசு நடத்தப்போவதில்லை. ஏனெனில் அவ்வாறு செய்தால் அத்துடன் எல்லாம் முடிந்துவிடும். பாஜகவின் அரசியல் முடிவுக்கு வந்துவிடும். அரசியலமைப் பைப் பாதுகாக்கவும் நாட்டின் வளர்ச்சிக் காகவும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தொடர்ந்து போராடி வரு கிறேன். எதிர்காலத்தில் நாங்கள் ஆட்சிக்குவந்தால் 50% இட ஒதுக்கீட்டை நீக்கிவிடுவோம். அதே போன்று பீகாரில் இருந்து இடஒதுக்கீட்டை தொடங்கு வோம்” என அவர் கூறியுள்ளார்.