திருவனந்தபுரம், ஜன.31 - காந்திஜியை எப்போதும் இந்து தேசிய வாதிகள் எதிரியாகவே கருதுகிறார்கள். பெரும்பான்மை வகுப்புவாதத்தின் அச்சுறுத்தல்களை காந்திஜி நன்கு அறிந்திருந்தார். காந்தி தனது கடைசி மூச்சு வரை இந்து-முஸ்லிம் நட்புறவுக்காக போராடினார் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினார். மேலும் முதல்வர் கூறுகையில், “மகாத்மா காந்தி மறைந்து 75 ஆண்டுகள் ஆகிவிட்டன. அவர் கற்பனை செய்த இந்தியா, சங்பரிவாரின் இந்துத்துவா தேசியவாதத்திற்கு எல்லா வகையிலும் எதிரானது. நாதுராம் விநாயக் கோட்சே என்ற மதவெறியன் காந்திஜியை சுட்டுக் கொன்றபோது, இந்தியா என்ற எண்ணமே காயப்பட்டது. நவீன ஜனநாயக தேசம் கட்டமைக்கப்பட தேவையான அடிப்படை கருத்துகளைப் பாதுகாக்க காந்திஜி தனது உயிரைத் தியாகம் செய்தார். விடுதலை அடைந்து 75 ஆண்டுகள் கடந்த பிறகும்கூட, நம் நாடு பன்முக சவால்களை எதிர்கொள்கிறது. நாட்டின் மதச்சார்பின்மை, பன்மைத்துவம் மற்றும் கூட்டாட்சி ஆகியவை தாக்குதலுக்கு உள்ளாகின்றன. காந்திஜி கொல்லப்பட்ட போது ஆர்எஸ்எஸ் தடை செய்யப்பட்டது.
அந்த ஆர்.எஸ்.எஸ். தான் இன்று நாட்டின் ஆட்சி அமைப்புகளுக்கு தலைமை வகிக்கிறது. அரசமைப்பு விழுமியங்களை காற்றில் பறக்கவிட்டு செல்கிறது. வெறுப்பையும் பிரிவினை அரசியலை யும் பயன்படுத்தி சங்பரிவார் தனது அர சியல் இலக்குகளை இந்தியாவில் தொடர்கிறது. மதத்தின் அடிப்படையில் குடியுரிமை மறுக்கப்படும் நிலையும் ஏற்பட்டது. நாட்டின் கூட்டாட்சி மதிப்புகளை நீர்த்துப் போகச் செய்யவும், மாநிலங்களின் அதிகாரங்களை ஆக்கிரமிக்கவும் திட்ட மிட்ட முயற்சிகள் நடந்து வருகின்றன. காந்திஜி மதச்சார்பற்ற இந்தியாவை கற்பனை செய்ததால் மதவெறியர்களால் கொல்லப்பட்டார் என்பதற்குப் பதிலாக, பல இடங்களில் காந்தி இறந்ததாக குழந்தை களுக்கு கற்பிக்கப்படுகிறது. காந்திஜியை கண்டு சங் பரிவார்கள் எப்போதும் பயப்படு கிறார்கள் என்பதற்கு இது மற்றொரு சான்று. காந்திஜியின் நினைவு என்பது வகுப்புவாத பிரிவினை அரசியலுக்கு முடிவு கட்டும் இந்தியாவின் அருமருந்தாகும். காந்தியின் நினைவு தினத்தில், வகுப்பு வாத அரசியலை ஜனநாயக முறையில் எதிர்க்க தயாராக இருப்பது நமது கடமை யாகும். அரசமைப்புச் சட்டத்தையும் நாட்டின் மதச்சார்பின்மையையும் பாதுகாக்க நாம் போராடத் தயாராக உள்ளோம் என்பதை இந்நாளில் ஒவ்வொருவரும் உறுதிமொழியாக ஏற்க வேண்டும்” என்றார்.