புதுதில்லி, பிப்.12- தலைநகர் தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் முதன்மை ஆணையராக அதுல்ய மிஸ்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். தில்லி தமிழ்நாடு இல்ல தலைமை ஆணையராக இருந்து வந்த ஜக்மோகன் சிங் ராஜூ விருப்ப ஓய்வு பெற் றதை அடுத்து, ஐஏஎஸ் அதி காரியான ராஜூ தமிழ்நாடு அர சின் கூடுதல் தலைமைச் செய லாளர் அந்தஸ்தில் தில்லி தமிழ் நாடு இல்லத்தில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், தமிழ்நாடு இல்லத்தின் முதன் மை உறைவிட ஆணையராக அதுல்ய மிஸ்ரா நியமிக்கப் பட்டுள்ளார். இதற்கான உத்த ரவை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலர் இறை யன்பு பிறப்பித்துள்ளார்.