states

img

நீதி பிழைக்குமா?

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்ய 6 வழக்கறிஞர்கள் மற்றும் 3 மாவட்ட நீதிபதிகள் என 9 பேரின் பெயர்களை உச்சநீதிமன்ற கொலீ ஜியம் அமைப்பு, ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களாக உள்ள ஆர்.ஜான் சத்யன், வி.லெட்சுமிநாராயணன், எல்.சி. விக்டோரியா கௌரி, பி.பி.பாலாஜி, ஆர்.நீலகண்டன், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோரும், மாவட்ட நீதிபதிகளாக உள்ள பி.வடமலை, ஆர்.கலைமதி, கே.ஜி.திலகவதி ஆகியோரும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.  இவர்களில் எல்.சி.விக்டோரியா கௌரி, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞராக உள்ளார். நாகர்கோவிலைச் சேர்ந்த இவர், பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அமைப்பின் தேசிய பொதுச் செயலாளராகவும் உள்ளார். இதை இவரது டுவிட்டர் பக்கத்தில் பகிரங்கமாகவே பதிவிட்டுள்ளார். 

நீதித்துறையில் ஆர்எஸ்எஸ் பின்புலம் உள்ளவர்களை திட்டமிட்டு நுழைப்பது, ஆர்எஸ்எஸ் வலியுறுத்தி வரும் மனுநீதியைத்தான் நிலைநாட்ட உதவுமே தவிர இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை நிலைநாட்ட ஒருபோதும் உதவப்போவதில்லை.  இதுதொடர்பாக தமது டுவிட்டர் பக்கத்தில், “நீதி பிழைக்குமா” என்று தலைப்பிட்டு கேள்வி எழுப்பியுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ், “விக்டோரியா கௌரி அவர்களது டுவிட்டர் சுயதகவல்கள், அவர் பாஜக  மகிளா மோர்ச்சாவின் தேசிய செயலாளர் என்கிறது. அவர் முழுக்க முழுக்க ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக  தலைவர்களின் டுவிட்டர் பக்கங்களை பின்தொடர்கிறார். இத்தகைய நபர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி  பொறுப்பிற்கு கொலீஜியத்தால் பரிந்துரைக்கப்பட்டுள் ளார்” என்று சுட்டிக்காட்டி விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பான பின்னூட்டத்தில், “2018ல் தான்  விக்டோரியா கௌரி வழக்கறிஞராக பணியாற்றவே வந்தார். வெறும் ஐந்தே ஆண்டுகளில் உயர்நீதிமன்றத் திற்கு நீதிபதி ஆகிவிட முடியுமா? என்ன தகுதி? ஆர்எஸ்எஸ் அமைப்பின் நபராக இருந்தால் மட்டும் போதும் போலும்” என்று விமர்சகர் ஒருவர் சாடியுள்ளார்.  அதே பின்னூட்டத்தில் விக்டோரியா கௌரியின் 2019 ஆகஸ்ட் 31 தேதியிட்ட பதிவினை விமர்சகர் ஒருவர் தேடிக் கண்டுபிடித்து இணைத்துள்ளார். அதில், “நான் இப்போதுதான் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தேன். நீங்களும் புதிய இந்தியாவை உருவாக்க பாஜகவில் சேர்ந்து உதவிட வேண்டும்” என்று குறிப்பிட்டு, அந்த நாட்களில் ‘மிஸ்டு கால்’ மூலம் பாஜக நடத்திய உறுப்பினர் பதிவுக்கான செல்போன் எண்ணையும் பதிவிட்டு, பாஜக உறுப்பினர் பதிவு பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறார்.  புதிய இந்தியா பிறந்ததோ இல்லையோ, அப்படி பதிவிட்ட மூன்றே ஆண்டுகளில் விக்டோரியா கௌரிக்கு  புதிய பதவி கிடைத்துவிட்டது!