states

1,18,979 ஆண்கள் 2021 -ல் தற்கொலை!

புதுதில்லி, செப்.10- ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோதக் கொள்கைகள், நாட்டையே நாசப்படுத்தும் பொரு ளாதாரக் கொள்கைகள் காரணமாக 2021-ஆம் ஆண்டில் 1,18,979  ஆண்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இவர்களில் தினசரி  ஊதியம் பெற்று வந்தவர்கள் 37,751 பேர், சுய தொழில் செய்தவர்கள் 18,803,  வேலையில்லாத வர்கள் 11,724. சரியாக குறிப்பிடுவதென்றால் 2021-ஆம் ஆண்டில் தினசரி 115 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.  குறைந்த பட்ச ஊதியம் கிடைக்காமல் தற்கொலை செய்து கொண்டவர் கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2021-ஆம் ஆண்டு 5,318 விவசாயிகள்,  5,563 விவசாயத் தொழிலாளர்கள் என விவசா யத்துறை சார்ந்து 10,881 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தற்கொலை செய்து கொண்ட வர்களில் பெரும்பான்மையோர் ஆண்கள். இது இந்தியாவில் தற்கொலை செய்து கொண்ட வர்களின் மொத்த எண்ணிக்கையில் 6.6 சத வீதம் ஆகும். விவசாயத் துறையில் ஈடுபட்டுள்ள வர்களின் தற்கொலையில்  மகாராஷ்டிராவில் (37.3 சதவீதம்), அதைத் தொடர்ந்து கர்நாடகா (19.9 சதவீதம்), ஆந்திரப் பிரதேசம் (9.8 சத வீதம்), மத்தியப் பிரதேசம் (6.2 சதவீதம்), தமிழ்நாடு (5.5 சதவீதம்) ஆகிய மாநிலங்கள் பிரதான இடத்தில் உள்ளன. இந்தத் தகவல்களை  தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ளது.

;