ராஜஸ்தான் மாநிலத் தில் நவம்பர் 25 அன்று சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலை யில், அங்கு தேர்தல் பிரச்சா ரம் சூடுபிடித்துள்ளது. ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியை தக்கவைக்கும் என பல்வேறு கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ள நிலை யில், ஒன்றிய உள்துறை அமைச் சர் அமித் ஷா பிரம்மாண்ட பிரச்சாரம் என்ற பெயரில் ஆபத்தை விளைவிக்கும் வகையில் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறார். தேர் போன்ற வாகனம் ராஜஸ்தானில் பிரச்சா ரம் செய்ய அமித் ஷா உயர மான தேர் போன்ற திறந்த வெளி வாகனத்தை பயன் படுத்தி வருகிறார். தோல்வி பயத்தின் எதிரொலியால் ராஜஸ்தான் மாநிலத்தின் சிறு கிராமத்தை கூட விடா மல் அமித் ஷா பிரச்சாரம் செய்து வரும் நிலையில், அவர் பிரச்சாரம் செய்யும் வாகனம் பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் பல்வேறு சிர மத்தை ஏற்படுத்தி வருகிறது. பிடியட் கிராமத்தின் பர் பட்சர் குடியிருப்புப் பகுதி யில் அமித் ஷா சென்ற வாக னத்தால் மின்கம்பி அறுந்து விழுந்தது. அமித்ஷா வாக னத்திற்கு பின்னால் வந்த பாதுகாப்பு அதிகாரிகள் இதனை உடனடியாக கவ னித்து அமித் ஷா வாக னத்தை நிறுத்தினார்கள். இல்லையென்றால் மின் கம்பி பொதுமக்கள் மீது விழுந்து பெரும் அசம்பா விதம் நிகழ்ந்து இருக்கும். பின் னர் வேறு வாகனத்தில் அமித்ஷா பயணத்தை தொடர்ந்தார்.