states

img

தில்லி காற்று மாசு அபாய அளவை நெருங்குகிறது

ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களில் எரிக்கப்படும் கோதுமை பயிர்களின் வைக்கோல் மாசு காரணமாக தேசிய தலைநகர் தில்லி கடந்த 19 நாட்களாக மூச்சுத்திணறி வருகிறது. தில்லி அரசு டீசல் வாகனத்திற்கு தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப் பாடுகள் விதிக்கப்பட்டா லும், மோடி அரசின் ஒத்து ழைப்பு இல்லாததால் தில்லிப் பகுதி காற்றின் தரம் இன்னும் மேம்படாமல் புகைமண்டலமாகவே காட்சி அளித்து வருகிறது. இந்நிலையில், தீபாவளி பண்டிகைக்கு கட்டுப் பாடுகளை மீறி வெடிக்கப் பட்ட பட்டாசுகள் மூலம் தில்லி காற்று மாசின் அளவு 400-ஐ நெருங்கி வரு கிறது. ஒன்றிய மாசுக் கட்டுப் பாட்டு வாரியத்தின் (CPCB) தரவுகளின் படி, தில்லியில் சராசரி காற்று மாசு அளவு 359 ஆக உயர்ந்துள்ளது.  அசோக் விஹார், ஆயா  நகர், பவானா, புராரி, துவார கா மற்றும் ஆர்.கே.புரம் போன்ற பகுதிகளும் தொடர்ந்து காற்றின் தரம் மோசமடைந்து வருவதால் மக்கள் இயல்பு நிலையை இழந்து தவித்து வருகின்ற னர்.  எனினும் தீபாவளி அன்று தில்லியின் நேரு நகர்,  பட்பர்கஞ்ச், அசோக் விஹார்,  ஓக்லா ஆகிய இடங்களில் 350 முதல் 400  வரை இருந்ததாக தனியார் காற்று தொடர்பான வானி லை அறிக்கைகள் செய்தி கள் வெளியிட்டுள்ளன. ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களில் கோதுமை பயிர்களின் வைக்கோல் களை எரிப்பதை நிறுத்தா விட்டால் ஒட்டுமொத்த தில்லியின் காற்று மாசின் அளவு 400-ஐ தொட்டுவிடும் என செய்திகள் வெளியாகி யுள்ளன.