states

சபரிமலை கிரீன்ஃபீல்டு விமான நிலையம் விரைந்து முடிக்க நடவடிக்கை

புதுதில்லி, மார்ச் 28- கேரளாவின் கனவுத் திட்டமான சபரி மலை கிரீன்ஃபீல்டு விமான நிலையத்துக்கு விரைந்து அனுமதி வழங்க வேண்டும் என்று  ஏ.ஏ.ரஹீம் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார். இத்திட்டம் தொடர்பாக அவர் மாநிலங்கள வையில் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில ளித்த விமான போக்குவரத்து துறை அமைச்  சர், நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கால  அளவை வரையறுக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார். சபரிமலை உட்பட 6 விமான நிலை யங்களுக்கு முதற்கட்ட அனுமதி கூட  வழங்கப்படவில்லை. விமான நிலை யங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் விமானப் போக்குவரத்தை எளிதாக்கு வதாக கூறும் ஒன்றிய அரசு, உண்மையில் சிவப்பு நாடா அணுகுமுறையைக் கடைப் பிடிக்கிறது என்றார் ஏ.ஏ.ரஹீம்.