states

img

தலைநகரில் பட்டபகலில் பெண் மீது ஆசிட் வீச்சு

தலைநகர் தில்லியில் பட்டப்பகலில் பெண் மீது ஆசிட் வீசப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. 
தலைநகர் தில்லியின் துவாரகா மாவட்டத்தில் இன்று காலை 9 மணியளவில் 17 வயது சிறுமி பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக  இரண்டு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் திடீரென பெண் மீது ஆசிட் வீசி விட்டு வேகமாக சென்றனர். 
இதில்  பெண்ணின் முகம் மற்றும் கண் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. தகவறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு சப்தர்ஜங் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆபத்தான நிலையில் அந்த சிறுமிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.  
இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.