states

img

வங்கதேசத்தில் மூளும் வன்முறை 978 இந்திய மாணவர்கள் நாடு திரும்பினர்

இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் இட ஒதுக்கீடு அறிவிப்பு தொடர்பாக கடந்த ஒரு வாரமாக தொடர்ச்சியாக வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இந்த வன்முறையில் 110 பேர் உயிரி ழந்துள்ள நிலையில், நாடு முழு வதும் இணையதள முடக்கத்துடன் ஊரடங்கு கட்டுப்பாடும் அமல்படுத் தப்பட்டுள்ளது.   இந்நிலையில், வங்கதேசத்தில் கல்வி  பயிலச் சென்ற உத்தரப்பிரதேசம், ஹரியா னா, மேகாலயா, ஜம்மு-காஷ்மீர் மாநி லத்தைச் சேர்ந்த 5000க்கும் மேற்பட்ட மாணவர்கள் வன்முறை சம்பவங்களால் தான் பயிலும் பல்கலைக்கழகங்களிலேயே சிக்கித் தவித்து வருகின்றனர்.  மாணவர்களை மீட்க ஒன்றிய அரசு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில், 978 இந்திய மாணவர் கள் சனியன்று நாடு திரும்பினர். 200 மாண வர்கள் விமானம் மூலமும், 778 மாண வர்கள் கப்பல், படகுகள் மூலமாகவும் நாடு திரும்பி உள்ளனர் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.