states

105 மணி நேரத்தில் 75 கி.மீ. சாலை கின்னஸில் இடம் பிடித்தது இந்தியா

புதுதில்லி, ஜூன் 8-  குறைந்த நேரத்தில் மிக நீளமான சாலையை அமைத்து கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது இந்தியா.  தேசிய நெடுஞ்சாலை ஒழுங்குமுறை ஆணையம் நஹாய் (NHAI), ராஜ்பத் இன்ஃப்ராகான் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து NH-53 நெடுஞ் சாலையில் மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி மற்றும்  அகோலா மாவட்டங்களுக்கு இடையே 105 மணி நேரத்  தில் 75 கி.மீ நீளத்தில் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக சாலைப் பணியாளர்கள் ஜூன் 3ஆம் தேதி காலை 7.27 மணிக்கு பணி ஆரம்பித்து, ஜூன் 7 மாலை 5 மணிக்கு பணியை முடித்தனர். இச்சாலை பணிக்கு மொத்தம் 105 மணி நேரம் 33 நிமிடங்கள் எடுத்துக் கொள்  ளப்பட்டது. 720 பணியாளர்கள் இரவு பகலாக வேலை  பார்த்துள்ளனர். கடந்த 2019ல், கத்தார் தலைநகர் தோஹாவில் 25.25 கி.மீ. நீளத்தில் பிட்டுமினஸ் கான்க்ரீட் சாலை அமைக்  கப்பட்டது. 10 நாட்களில் இந்த சாலை அமைக்கப்பட்டதே முந்தைய கின்னஸ் சாதனையாக இருந்தது. அதை  இந்தியா முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளது. இந்த சாதனைக்காக தேசிய நெடுஞ்சாலை ஒழுங்கு முறை ஆணைய அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரரான ராஜ்பத் இன்ஃப்ராகான் பிரைவேட் லிமிடட் நிறுவன ஊழியர்களுக்கு ஒன்றிய அமைச்சர் நிதின் கட்காரி நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளார்.