states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

உலகிலேயே முதன் முறையாக ஸ்காட்லாந்து நாட்டில் ஓட்டுநர் இல் லாத பயணிகள் தானி யங்கி பேருந்து சேவை தொடங்கப்பட உள் ளதாக அறிவிப்பு வெளி யாகியுள்ளது. ஓட்டுநர்  இல்லாமல் மணிக்கு 50 மைல் வேகத்தில் சென்றா லும், பாதுகாப்புக்கு என்று ஒரு ஓட்டுநர் பேருந்தில் இருப்பார் என தகவல் வெளியாகியுள்ள நிலையில், ஸ்காட்லாந்து அரசு இன்னும் ஓட்டுநர் இல்லாத பேருந்து சேவைக்கு அனுமதி வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கொசுக்கடியால் ஏற்படும் மரணம் விபத்து அல்ல; இதனால் இந்த வழக்கில் காப்பீடு கோர முடியாது என இழப்பீடு கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள “மோச்சா” புயல் ஞாயிறன்று வங்கதேசத்தின் காக்ஸ் பஜார் மற்றும் மியான் மரின் கியாக்பியு இடை யே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அப்பகுதி யில் வாழும்  லட்சக்கணக் கான மக்களை வெளி யேற்றும் பணி தொடங்கப் பட்டுள்ளது.

மனிதர்களை விண்வெ ளிக்கு அனுப்பும் ககன் யான் திட்டத்தின் கிரை யோஜெனிக் எஞ்ஜின் திருநெல்வேலி மகேந் திரகிரி இஸ்ரோ மையத் தில் தயாரிக்கப்பட்ட நிலையில், அதற்கான விண்கல எஞ்ஜின் சோத னை வெற்றி பெற்றுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதிக்குள் இந்துத்துவா அமைப்பு “சிவலிங்கம்” இருப்ப தாக கூறிய விவகாரத் தில், மசூதி கட்டிடத்தின் கார்பன் டேட்டிங் நடத்த இந்திய தொல்லியல் துறைக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கட்டிடத் திற்கு எந்த சேதமும் செய்யக்கூடாது என்று உயர்நீதிமன்றம் எச்சரி க்கை விடுத்துள்ளது. கார்பன் டேட்டிங் என்பது கரிமப் பொருட்களின் வயதைக் கண்டறியப் பயன்படுத்தப்படும் ஒரு முறையாகும்.

பிரேசிலில் ஜி-20

*பிரேசிலின் முக்கிய நகரங்களில் ஒன்றான ரியோ டி ஜெனிரோவில் 2024 ஆம் ஆண்டுக்கான ஜி-20 உச்சி  மாநாடு நடைபெறவுள்ளது. ஜி-20 நாடுகளின் அரசியல் தலை வர்கள் இங்கு பங்கேற்பார்கள் என்று ரியோ மாகாணத்தின் ஆளுநர் கிளாடியோ காஸ்ட்ரோ தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தியில், உலகின் பெரிய 20 பொருளாதாரங்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கவிருக்கின்றன என்று குறிப்பிட்டிருக்கிறார். 

*20 உறுப்பு நாடுகளோடு மேலும் பத்து நாடுகள் அழைப்பாளர்களாகப் பங்கேற்கவிருக்கின்றன. பிறநாடுகளுடன் ஒற்றுமையை அடையாளப்படுத்தும் வகையில் இந்த அழைப்பு இருக்கும். உலகின் பிற நாடுகளுட னான உறவு எத்தகைய திசையில் பயணிக்க வேண்டும்  என்பதை அழைப்பாளர்கள் தரும் விபரங்களில் இருந்து விவாதம் நடத்தி ஒன்றுபட்ட கருத்தை உருவாக்குவார்கள்.

*இந்த ஜி-20 உச்சிமாநாடு 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நடைபெறும். வரும் டிசம்பர் மாதத்தில் ஜி-20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை பிரேசில் எடுத்துக்கொள்ளும். தற்போது இந்தத் தலைமைப் பொறுப்பு இந்தியாவின்  வசம் இருக்கிறது. தற்போது பிரேசில், இந்தியா, அமெரிக்கா, சீனா,  ஜெர்மனி, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான், இத்தாலி,  தென் ஆப்பிரிக்கா, சவூதி அரேபியா, அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, கனடா, தென் கொரியா, இந்தோனேசியா, மெக்சிகோ, துருக்கியே மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகிய நாடுகள் இந்த அமைப்பில்உள்ளன.