states

அரசாணை 354-ஐ அமல்படுத்துக

சென்னை, மே 24 - அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு தொடர்பாக கலைஞர் ஆட்சியில் பிறப்பிக்கப்பட்ட அரசாணை எண் 354-யை அமல்படுத்த அரசு மருத்துவர்கள் சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று முதலமைச்சருக்கு தமிழ்நாடு நல்வாழ்வு இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு நல்வாழ்வு இயக்கத்தின் தலைவர் மரு.சி.எஸ். ரெக்ஸ் சற்குணம், செயலாளர்  ந.ஞானகுரு ஆகியோர் விடுத்திருக்கும் அறிக்கை வருமாறு: - கோவிட் 19 நோய்த் தொற்றிற்கு எதிராக களத்தில் தமிழ்நாடு அரசு மருத் துவர்களும் மருத்துவத்துறை ஊழியர்களும் முன்னின்றவர்கள், உயிர்  தியாகத்திற்கும் அஞ்சாமல் பணியாற்றி யவர்கள் என்பதை முதல்வர் அறிந்ததே. இதை நாடே போற்றுகிறது. கடந்த ஆட்சியின்போது அரசு  மருத்துவர்கள் பல்வேறு கோரிக்கை களை முன்னிறுத்தி போராடி பழிவாங் கல் நடவடிக்கைகளுக்கு ஆளா னார்கள். அன்றைக்கு போராடிய மருத்து வர்களுக்கு திமுக ஆதரவு அளித்தது. திமுக தலைவரும் இன்றைய முதல மைச்சருமான மு.க.ஸ்டாலினும், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மருத்து வர்களின் நியாயமான கோரிக்கை களை நிறைவேற்றோம் என்று உறுதி யளித்தார். அது அரசு மருத்துவர்க ளுக்கு ஆறுதலாக அமைந்தது.

தற்போது ஆட்சிக்கு வந்துள்ளதும் மருத்துவர்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது. அதே நேரத்தில், பல  கோரிக்கைகள் நிறைவேற்ற வேண்டி யுள்ளது. குறிப்பாக, கலைஞர் ஆட்சிக் காலத்தில் மருத்துவர்களின் ஊதியம் தொடர்பாக அரசு ஆணை எண் 354 வெளியிடப்பட்டதை முழுமையாக அமல்படுத்தாமல் உள்ளது. இதனை உடனடியாக அமல்படுத்த வேண்டும். அடுத்தாக, 12 ஆண்டுகளில் வழங்க வேண்டிய நான்கு ஊதியப் பட்டைகள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் இருக்கிறது. ஆகவே, தமிழ்நாடு முதலமைச்சர், அரசு மருத்து வர்களின் சங்கப் பிரதிநிதிகளை அழைத்துப்பேசி நியாயமான கோரிக் கைகளை நிறைவேற்றித்தருமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு தெரிவித்திருக்கிறார்கள்.

சட்டப்போராட்டக்குழு

அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக்குழு தலைவர் மரு. எஸ்.பெருமாள் பிள்ளை வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,“விலைமதிப்பற்ற உயிர்களை காப்பாற்றும் அரசு மருத்துவர்களுக்கு உரிய சம்பளத்தை வழங்க மறுப்பது வருத்தமளிக்கிறது என்றும் ஊதிய உயர்வு வழங்குவது குறித்து அரசாணை 354 மற்றும் 293 இரண்டையும் சேர்த்து யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் புதிய அரசாணை வழங்கப்படும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியிருப்பது ஏற்கதக்கதல்ல. ஆகவே, கடந்த ஆட்சியின்போது நடந்த போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்து உரையாற்றிய இன்றைய முதலமைச்சர், ஏற்கெனவே அளித்த உறுதியின்படி அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறை வேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி யிருக்கிறார்.