states

16,000 கன அடி தண்ணீர் திறக்க வலியுறுத்துவோம்: துரைமுருகன்

சென்னை, அக்.12- காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் வெள்ளிக்கிழமை (அக்.13)  நடைபெற உள்ளது.  அந்தக் கூட்டத்தில், 16,000 கனஅடி தண்ணீர் தரவேண்டும் என்று தமிழ்நாடு சார்பில் கோரிக்கை வைக்கப்படும் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த துரைமுருகன், “தமிழ்நாட்டிற்கு காவிரியில் அக்.30  வரை விநாடிக்கு 3000 கன அடி நீர் திறக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங் காற்று குழு பரிந்துரைத்துள்ளது. அக்.13 காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நடைபெற உள்ளது. அந்தக் கூட்டத்தில், 16,000 கனஅடி தண்ணீர்  தரவேண்டும் என்று தமிழ்நாடு சார்பில் கோரிக்கை வைப்போம்”என்றார். இதுவரையில் 4.21 டிஎம்சி தண்ணீர் கிடைத் துள்ளது. இன்னும் 0.4543 டிஎம்சி தண்ணீர் வர வேண்டியுள்ளது. எனவே, இன்றைய கூட்டத்தில்  16,000 கனஅடி தண்ணீர் வழங்க வேண்டும்  என்ற கோரிக்கையை வைக்க இருக்கிறோம். தொடர்ந்து போராடிக் கொண்டுதான் இருக்கி றோம். காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரைத்த தண்ணீரை கர்நாடகா விட்டுக் கொண்டிருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். இன்னும் 110 நாட்கள் தண்ணீர்திறந்துவிட வேண்டிய நிலையில், மேட்டூர் அணையில் இருந்து  தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுவிட்டது. அணையை மீண்டும் திறக்க வாய்ப்பு இருக்கிறதா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “தற்போது 8 டிஎம்சி க்கு  வந்துவிட்டது. இனிமேல் டெத் ஸ்டோ ரேஜ் வந்துவிடும். இனிமேல் தண்ணீர் திறக்க வாய்ப்பு இல்லை. காவிரியிலிருந்து 16,000 கன அடி கொடுத்தால், அணையை திறக்க வாய்ப்பு  இருக்கிறது. குடிதண்ணீருக்கு மட்டும் அணை திறக்கப்படும் என்றும் துரைமுருகன் கூறினார்.